டெஹ்ரான்/ டெல்அவிவ், அக். 2 - மத்தியக் கிழக்கில் கொலை வெறி பிடித்தலையும் இஸ்ரேல் மீது பதிலடி நடவடிக்கையாக ஈரான் ராணுவம் 400-க்கும் அதிகமான ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியது.
ராணுவத் தளங்களுக்கு குறி
மக்களின் வசிப்பிடங்கள் மீது அல்லாமல், இஸ்ரேலின் டெல் அவிவ், நெகேவில் உள்ள நெவாடிம் விமானப்படைத்தளம் (அமெரிக்கா வின் ஆயுதங்கள் இறக்குமதி செய்யப்படும் தளம்), ஹட்செரிம் ராணுவத் தளம், ரேடார்கள் மற்றும் பீரங்கிகள் நிறுத்தப்பட்டுள்ள இடங்கள், மொசாத் உளவு அமைப்பின் தலைமையகம் ஆகிய இடங்களை குறிவைத்து, சூப்பர் சானிக் ரக ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதலை ஈரான் நடத்தி யுள்ளது.
மக்கள் மீது தாக்குதல் இல்லை
மக்களின் உயிருக்கு சேதம் ஏற்படாதவாறு, அதேநேரம் இஸ்ரேல் ராணுவம் கடுமையான சேதத்தைச் சந்திக்கும் வகையில், தங்களின் இஸ்பஹான், தப்ரிஸ், கோர்ரமாபாத், கார்ஸ், ஆர்க் ஆகிய நகரங்களில் உள்ள ராணுவத் தளங்களில் இருந்து ஈரான் நடத்திய இந்த ஏவுகணைத் தாக்குதலை, இஸ்ரேலின் ‘ஏவுகணைத்தடுப்பு அமைப்புகளால்’ தடுக்க முடி யவில்லை என்று கூறப்படுகிறது.
ஈரானின் 80 - 90 சதவீதமான ஏவு கணைகள் இஸ்ரேலுக்குள் புகுந்து இலக்கைத் தாக்கி அழித்துள்ளதாக ஈரான் அரசு ஊடகங்கள் தெரி வித்துள்ளன.
நெவாடிம் விமானத் தளம் கடும் சேதம்
இவற்றில், தாக்குதலுக்கு உள்ளான நெவாடிம் விமானத் தள மானது, 50 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் நான்கு ஓடுபாதை களை கொண்ட மிகப் பெரிய விமானத் தளமாகும். இங்கு அமெரிக்கா தயாரிப்பான எப் 35 ஸ்டெல்த் அதிநவீன போர் விமானங் கள், சி-130 போக்குவரத்து விமா னங்கள், போயிங் 707 டேங்கர் விமானங்கள், உளவு விமானங்களு டன் மூன்று படைப் பிரிவுகள் செயல்படுகின்றன. இந்நிலையில், நெவாடிம் தளத்தை ஃபத்தா-1 என்ற ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் தாக்கி கடுமை யான சேதத்தை ஈரான் ஏற்படுத்தி இருப்பதுடன், 20-க்கும் மேற்பட்ட போர் விமானங்களையும் அழித்து ள்ளதாக கூறப்படுகிறது.
இந்த ஃபத்தா-1 ஹைபர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணைகளை இடை மறித்து தடுப்பது மிகுந்த சவா லானது என்றும் தகவல்கள் தெரி விக்கின்றன.
இஸ்ரேல் மட்டுமன்றி அமெரிக்காவும் அதிர்ச்சி
அந்த வகையில், ஈரான் நடத்திய திடீர் தாக்குதல் இஸ்ரேலை நிலைகுலையச் செய்துள்ளது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளும் இஸ்ரேலின் கூட்டாளி நாடுகளையும் ஈரானின் தாக்குதல் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியிருக்கிறது.
கடந்த சில மாதங்களாக இஸ் ரேல் ராணுவம் எல்லை கடந்த பயங் கரவாதத்தில் ஈடுபட்டு வந்தது. ஜூலை 31 அன்று ஈரானின் தலைநகர் டெஹ்ரான் மீது ஏவுகணைத் தாக்கு தல் நடத்தி ஹமாஸ் அமைப்பின் அர சியல் பிரிவுத் தலைவர் இஸ்மா யில் ஹனியேவை படுகொலை செய்தது. அப்போதே, இஸ்ரே லுக்கு உரிய பதிலடி கொடுக்கப் படும் என்று ஈரான் கூறியிருந்தது.
3 மாதங்களில் 7 தலைவர்கள் படுகொலை
ஆனால், அதன்பிறகும் செப்டம் பர் 27 அன்று புரட்சிகர காவல்படை யின் தளபதியான பிரிகேடியர் ஜென ரல் அப்பாஸ் நில்ஃபோரூஷன், செப்டம்பர் 28 அன்று ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா ஆகிய முக்கியத் தலை வர்கள் உட்பட மொத்தம் ஏழு தலை வர்களை படுகொலை செய்தது.
லெபனான் மட்டுமல்லாது சிரியா, இராக் ஆகிய நாடுகளில் உள்ள பாலஸ்தீன ஆதரவு குழுக் கள் மீதும் இஸ்ரேல் ராணுவம் பயங்கரவாத தாக்குதலை நடத்தி வந்தது. இந்த தாக்குதல்கள் எப் போது வேண்டுமானாலும் ஈரா னைப் போருக்குள் இழுக்கும் என்ற அபாயச் சூழலை உருவாக்கியது.
யுத்த வெறியில் நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல! : ஈரான் பிரதமர்
இந்த ஏவுகணைத் தாக்குதல் இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவைப் போல போர் வெறியில் நடத்தப்படவில்லை. ஈரான் மற்றும் குடிமக்களைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்டது. சட்டப் பூர்வமான உரிமைகளுக்காகவும், ஈரான் மற்றும் மத்திய கிழக்கில் அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் நடத்தப்பட்ட தாக்குதல். ஈரான் அரசு எத்தகைய அச்சுறுத்த லுக்கும் எதிராக உறுதியாக நிற்கிறது. இந்த தாக்குதல் ஈரானின் ஒட்டுமொத்த சக்தியில் ஒரு பகுதி மட்டுமே. இனவெறி இஸ்ரேல் அரசின் ஆக்கிரமிப்புக்கு ஒரு உறுதியான பதில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஈரானுடன் போரில் ஈடுபட நினைக்க வேண்டாம் என ஈரான் பிரதமர் மசூத் பெசெஷ்கியான் குறிப்பிட்டுள்ளார்.
நடந்தது பதிலடி தாக்குதலே!
“தங்களது முக்கியத் தலைவர்களின் படுகொலை க்கு பதிலடிகொடுக்கும் வகையில் இஸ்ரே லால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முக்கிய இடங்களை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தினோம்” என்று ஈரான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.
எல்லையில் தொடரும் போர்
லெபனானின் தெற்கு எல்லையில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கும் இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே தரைவழி போர் நடந்து வருவதை ஹிஸ்புல்லா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது. இந்த போரில் 18 இஸ்ரேல் படையினர் படுகாயமடைந்து உள்ளதாக வும் 2 பேர் மரணமடைந்துள்ளதாகவும் குறிப்பி டப்பட்டுள்ளது.
அமெரிக்காவும் சில ஐரோப்பிய நாடுகளும் வெளியேற வேண்டும்
எங்களுடைய மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற் பட்டுள்ள பிரச்சனைகளுக்கு அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளே அடிப்படைக் காரணம். இங்கு அமைதி ஏற்பட வேண்டும் என்றும் அமைதியை ஆதரிப்பதாகவும் கூறும் அவர்களால் தான் பகையும் போரும் உருவாகிறது.
அவர்கள் இந்த பிராந்தியத்தை விட்டு வெளியேறினால் இந்த சண்டைகளும், போர்களும் நின்றுவிடும். பிறகு இங்குள்ள நாடுகளே அமைதியாக தங்கள் நாட்டை ஆட்சி செய்வார்கள் என ஈரானின் உச்ச பட்ச தலைவராக உள்ள அயத்துல்லா அலி கமேனி குறிப்பிட்டுள்ளார்.
இடைமறித்து தாக்க பைடன் நிர்வாகம் உத்தரவு
இஸ்ரேலுக்கு தொடர்ந்து ஆதரவளிப்போம் எனவும், மத்திய கிழக்கில் உள்ள ராணுவத்தளங்கள் ஈரா னில் இருந்து வரும் ஏவுக ணைகளை இடைமறித்து தாக்க வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.
ஜனாதிபதி பைடன் மற்றும் துணை ஜனாதிபதி கமலா ஹாரிசால் மிகப் பெரிய போர் தூண்டப்பட்டு விட்டது என தீவிர இஸ்ரேல் ஆதர வாளரான குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
இனப்படுகொலையின் போது ஏன் அமைதியாக இருந்தீர்கள்?
ஈரானின் தாக்குதல்களை கண்டு தற்போது கோபத்து டன் கண்டிப்பவர்கள், இந்த நூற்றாண்டில் இல்லாத அளவுக்கு பல மாதங்களாக இஸ்ரேல் பாலஸ்தீன மக்களை இனப் படுகொலை செய்யும் போது அமைதி காத்திருந்தார்கள் என்றால் இது இரட்டை வேடத்தின் உச்சம். இந்த போர் பதற்றத்துக்கு காரணமானவர்களுக்கு ஒரு பெயர் இருக்கிறது. அது தான் அமெ ரிக்கா, என ஸ்பெயினின் இடதுசாரி தலை வர் இயோன் பெலரா விமர்சித்துள்ளார்.
காசாவில் தொடரும் படுகொலைகள்
ஈரான் நடத்திய தாக்குதலுக்கு இடையிலும், காசா வில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து படுகொலை களில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 51 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டு உள்ளதாக வும், 82 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேபோல தனது ஆக்கிரமிப்பிலுள்ள மேற்குக் கரையி லும் இஸ்ரேல் ராணுவம் தொடர் படுகொலைகளை செய்து வருகிறது. இதுவரை காசாவில் 41 ஆயிரத்து 689 பாலஸ்தீனர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 96 ஆயி ரத்து 625 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்று காசாவில் உள்ள சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்
மத்திய கிழக்கில் போர் தீவிரமடைந்துள்ளதை ஐ.நா. பொதுச் செயலாளர் அந்தோணியே குட்ட ரெஸ் கண்டித்துள்ளார். போரை உடனே நிறுத்த வேண்டும் எனவும், எங்களுக்கு உறுதியான போர் நிறுத்தம் தேவை எனவும் வலியுறுத்தி யுள்ளார்.
மேலும் குட்டரெஸை இஸ்ரே லுக்குள் நுழைய கூடாது என்று அந்நாட்டு தடை விதித்துள்ளது. ஈரான் நடத்திய தாக்குதலை அவர் வெளிப்படையாக கண்டிக்கவில்லை என வெளியுறவுத் துறை அமைச்சர் காட்ஸ் காரணம் கூறியுள்ளார்.
பயந்து பின்வாங்க மாட்டோம்!
“இத்தாக்குதலுக்கு கண்டிப்பாக பதிலடி கொ டுப்போம்” என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு மிரட்டல் விடுத்த நிலையில், “இஸ்ரேல் பதில் தாக்குதலை நடத்தினால் கடுமையான விளைவு களை சந்திக்க வேண்டி இருக்கும்” என்று அதற்கும் ஈரான் புரட்சிகர காவல் படையின் தலைமை தளபதி முஹம்மது பக்கேரி பதில் எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
“மீண்டும் இஸ்ரேல் தாக்குதலை நடத்தினால், தலை நகர் டெல்அவிவ் மற்றும் ஹபிபா துறைமுகத்தை ஒரே நாள் இரவில் அழித்து விடுவோம். அங்குள்ள மக்க ளைப் பற்றி கவலைப்பட மாட்டோம்” என புரட்சிகர காவல்படையின், குட்ஸ் பிரிவு முன்னாள் தளபதி சர்தார் வஹிதியும் கடுமையாக எச்சரித்துள்ளார்.
இந்தியர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்
ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து, இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுமாறும் இந்திய தூதரகம் கேட்டுக் கொண்டுள்ளது.
“இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும், உள்நாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி நடக்க வேண்டும். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், பாதுகாப்பு பதுங்கு குழிகளுக்கு அருகிலேயே இருக்க வேண்டும். நிலைமையை இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளது” என்று குறிப்பிட்டுள்ள இந்தியத் தூதரகம், ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தூதரங்களின் 24 மணி நேர உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளுமாறு கூறி, தொலைபேசி: +972-547520711, +972-543278392 மின்னஞ்சல்: consi.telaviv@mea.gov.in ஆகியவற்றை யும் வெளியிட்டுள்ளது. மேலும் தூதரகத்தில் இன்னும் பதிவு செய்யாத இந்தியர்கள் உடனடியாக பதிவு செய்யுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
தற்காப்பிற்கான தாக்குதல் : ஈரான்
ஈரான் நடத்தியுள்ள இந்த தாக்குதல் தற்காப்பிற் கான தாக்குதல் தான் எனவும், ஐ.நா. சட்ட விதி 21-இன் படி இது தற்காப்பிற்கான தாக்குதல் என் றும் தனது ‘எக்ஸ் பக்கத்தில் ஈரான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி குறிப்பிட்டுள்ளார். மேலும் இஸ்ரேலுக்கு ஆதர வாக வந்தால் விளைவுகள் மோச மானதாக இருக்கும் என அமெரிக் காவிற்கும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.