world

img

விண்வெளி ஆராய்ச்சியில் ஈரான் புதிய சாதனை

விண்வெளி ஆராய்ச்சியில் ஈரான் புதிய சாதனையை படைத்துள்ளது.
 

விண்வெளி துறை ஆராய்ச்சியில் உலகின் ஒரு சில நாடுகள் மட்டுமே ஆர்வமும், ஆதிக்கமும் செலுத்தி வருகிறது. இச்சூழலில் கடந்த சில ஆண்டுகளாக ஈரான் நாடும் விண்வெளிக்கு செயற்கை கோள்களை அனுப்புவது தொடர்பான ஆராய்ச்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.

இந்நிலையில், விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை ஏவும் வகையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ராக்கெட்டை வியாழனன்று வானில் வெற்றிகரமாக ஏவி ஈரான் நாட்டு விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர். அதுவும், ஒரே நேரத்தில் மூன்று செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த ராக்கெட்டானது வினாடிக்கு 7,350 மீட்டர் வேகத்தில் பயணித்து அதன் இலக்கான 470 கிலோ மீட்டரை சில மணி நேரங்களுக்குள் அடைந்தது. இதன்மூலம் செயற்கைகோளை விண்ணில் ஏவும் தகுதிபடைத்த நாடுகளில் ஒன்றாக ஈரான் மாறியுள்ளதாக அந்நாட்டு விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் பெருமிதம் தெரிவித்துள்ளனர்.