காத்மாண்டு, அக். 29- “காசாவின் நிலை மிகவேகமாக மோசமாகி வருகிறது; ரத்தம் சிந்தும் இந்த மோசமான கனவை முடிவுக்கு கொண்டு வந்து போரை நிறுத்துங்கள்” என ஐநா பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்டரெஸ் மீண்டும் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியுள்ளார். நேபாளத்திற்குச் சென்றுள்ள குட்டரெஸ் தலைநகர் காத்மாண்டுவில் செய்தியாளர் சந்திப்பின் போது, காசாவில் நிலைமை நாளுக்கு நாள் மிக மோசமாகி வருகிறது எனவும், சர்வதேச அமைப்பின் ஆதரவுடன் மனிதாபிமான முறையில் போரை நிறுத்துவதற்கு பதிலாக இஸ்ரேல் தனது இராணுவ நடவடிக்கைகளை தீவிரப் படுத்தியதற்கு வருந்துவதாகவும் கூறினார்.
மேலும், மனிதாபிமானப் பேரழிவு நம் கண் முன்னே நடைபெறுவதை உலகம் கண்டுகொண்டிருக்கிறது என்றும் கொலை செய்யப்பட்ட மற்றும் காயமடைந்த பொது மக்களின் எண்ணிக்கை ஏற்றுக்கொள்ள முடி யாதது என்றும் அவர் தெரிவித்தார்.