world

காசா மீது இஸ்ரேல் போர் சில முக்கிய கள நிகழ்வுகள்

uயூத மதவெறி சியோனிசத்தை எதிர்ப்பது யூதத்தையே எதிர்ப்பதற்கு சமம் என அமெரிக்க நாடாளுமன்றம் தீர்மானத்தை இயற்றியுள்ளது. அமெரிக்காவில் பெருகிவரும் பாலஸ்தீன ஆதரவை முடக்க இது ஒரு உபாயம். இந்த தீர்மானத்துக்கு ஆதரவாக 311 பேரும் எதிராக 14 பேரும் வாக்களித்தனர். 92 பேர் நடுநிலை வகித்தனர். 
uஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேல் மிகவும் அதிகமான விலையை கொடுத்து வருகிறது எனவும் ஏராளமான இஸ்ரேலிய ரணுவத்தினர் உயிரிழந்துள்ளனர் எனவும் ராணுவ அமைச்சர் யோவ் காலண்ட் கூறியுள்ளார்.
uபாலஸ்தீனம் மீதான இஸ்ரேல் போர் 61ஆவது நாளில் 16,248 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் குழந்தைகள்-7112 பேர்/ பெண்கள்-4885 / மருத்து வர்கள்-268/ செவிலியர்கள்-32/ ஊடக வியலாளர்கள்-81. இதே காலகட்டத்தில் மேற்கு கரை பகுதியில் 254 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இங்கு ஹமாஸ் இல்லை என்பது கவனிக்கத்தக்கது. 
uவெள்ளை மாளிகையில் பயிற்சியில் உள்ள சுமார் 40 பேர் காசாவில் நிரந்தர போர் நிறுத்தம் பைடன் கோர வேண்டும் என கடிதம் எழுதியுள்ளனர். பைடன் கவனிப்பாரா? அல்லது கடந்த பல கோரிக்கைகள் போல இதுவும் கேளா செவியர் காதில் ஊதிய சங்காக ஆகுமா? 
uபினியாமின் நீதம் எனும் பிரிட்டன் குடிமகன் காசா போரில் இஸ்ரேல் சார்பாக போரிட்டு உயிரிழந்துள்ளார். இது பிரிட்டனில் கடும் விவாதங்களை கிளப்பி யுள்ளது.
uஇஸ்ரேலின் இன ஒழிப்பு நடவடிக்கை களிலிருந்து காசாவை காப்பாற்றுவதில் உலகம் தார்மீக ரீதியாக தோல்வி அடைந்துவிட்டது என செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் மிர்ஜானா ஸ்போல்ஜரிக் விமர்சித்துள்ளார்.
uபாலஸ்தீனத்தில் அடக்கப்படும் மக்களுக்கு உறுதியான ஆதரவை தெரிவித்ததற்காக சீனாவை ஈரான் பாராட்டியுள்ளது.
uகாசா போர் தொடங்கிய இந்த 61 நாட்களில் 10,000 டன் ராணுவ தளவாடங்களை அமெரிக்கா இஸ்ரேலுக்கு தந்துள்ளது. மறுபுறத்தில் இஸ்ரேல் அப்பாவி மக்களை கொல்லக்கூடாது எனவும் கூறு
கிறது. முதலைக்கண்ணீர் என்பது இது தானோ?
uகடந்த ஆண்டு மட்டும் சுமார் 110 சதுர கி.மீ. பரப்பளவு அளவுக்கு மேற்கு கரையில் இஸ்ரேலிய குடியேறி தீவிரவாதிகள் பாலஸ்தீன மக்களின் நிலத்தை அபகரித்துள்ளனர். 
uஹமாசின் பூமிக்கடியில் உள்ள கட்டமை ப்புகளுக்குள் வெள்ளத்தை பாயவிடுவது நடைமுறை சாத்தியமல்ல எனவும் ஹமாசையும் பாலஸ்தீன மக்களையும் உளவியல்ரீதியாக பயமுறுத்தும் இஸ்ரேலின்சூழ்ச்சி இது எனவும் முன்னாள் ஜோர்டான் தலைமை ராணுவ அதிகாரி முகம்மது அல் முகாபலா கூறியுள்ளார்.
uஅயர்லாந்து தலைநகரம் டப்ளின் நகர நிர்வாக கட்டிடத்தில் பாலஸ்தீன கொடி ஏற்றப்பட்டுள்ளது. 
        - அ.அன்வர் உசேன்uயூத மதவெறி சியோனிசத்தை எதிர்ப்பது