டெல் அவிவ், நவ. 7 - பாலஸ்தீனம் மீது கொடூரமான யுத்தத்தை நடத்தி வரும் இஸ்ரேல், இதுவரை 10 ஆயி ரத்திற்கும் அதிகமான மக்களைக் கொன்று குவித்துள்ளது. இஸ்ரேலால் கொன்று குவிக்கப்பட்ட மக்களில் பெண்களும், குழந்தைகளும் மட்டுமே சுமார் 7 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கை, சர்வ தேச சமூகத்தை உலுக்குவதாக அமைந்துள்ளது. கடந்த 30 நாட்களில், 10 ஆயிரத்து 581-க்கும் அதிகமான பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணு வம் குண்டுகளை வீசிக் கொன்றுள்ள நிலையில், இவர்களில் 4 ஆயிரத்து 412 பேர் குழந்தைகள், 2 ஆயிரத்து 761 பேர் பெண்கள் என்பது தெரிய வந்துள்ளது. அத்துடன் குழந்தைகள் உட்பட மேலும் 2 ஆயிரத்து 411 பேர், இடிபாடுகளில் இருந்து இன்னும் மீட்கப்படாமல் உள்ளனர். அவர் களை சேர்த்தால், கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை மேலும் உயரும். இவர்கள் தவிர, 28 ஆயிரத்து 137 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்களில் பலர் உடல் உறுப்புகளை இழந்து ஊனமாகி யிருக்கும் துயரமும் அரங்கேறியுள்ளது. இதனால் போரை நிறுத்த வேண்டும் என்று உலகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. இங்கிலாந்து, ஜெர்மனி, அர்ஜெண்டினா, கிரீஸ், ஜோர்டான், துருக்கி, இராக், ஈரான், பாகிஸ்தான், இந்தோனேசியா மட்டுமன்றி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிலும் கூட மக்கள் பல்லாயிரக்கணக்கில் கூடி பேரணிகளை நடத்தி வருகின்றனர்.
நெறிமுறைகளை மீறும் இஸ்ரேல்
எனினும், இவ்வளவு மக்களை இனப்படு கொலை செய்த பின்பும் அடங்காத இஸ்ரேல், ஹமாஸ் குழுவை அழிக்காமல் ஓயமாட்டோம், அவர்களது பதுங்கு குழிகளை குண்டுவீசி அழிக்கிறோம்; காசா முழுவதையும் கைப்பற்று வோம் என்று வெறிக்கூச்சலுடன், சர்வதேச போர் விதிமுறைகளை மீறித் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. பாலஸ்தீன மக்கள் பாதுகாப்புத் தேடி அடைக்கலம் புகுந்திருந்த 61 மசூதிகள் 2 தேவாலயங்கள், 194 பள்ளிக்கூடங்கள், ஐநா அகதிகள் முகாம்கள், மருத்துவமனைகள் மீதும் தடை செய்யப்பட்ட வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. 290 மருத்துவ ஊழியர்கள் மீதும் குண்டுகளை வீசி போர்க் குற்றங்களில் ஈடுபட்டுள்ளது.
மற்றொரு பேரழிவு
தாக்குதல் துவங்கிய பிறகு, வடக்கு காசா பகுதியில் இருந்து 12 லட்சம் பாலஸ்தீனர்களை வெளியேறுமாறு எச்சரித்த இஸ்ரேல், அவ்வாறு மக்கள் வெளியேறிச் சென்றபோது, பாதை நெடுகிலும் குண்டுகளை வீசிப் படுகொலை செய்ததோடு, குடியிருப்புப் பகுதிகளிலும் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி சுமார் 51 ஆயி ரத்து 100 வீடுகளை முற்றிலுமாக தகர்த்தது. மேலும் 1 லட்சத்து 53 ஆயிரம் வீடுகளை, மக்கள் மீண்டும் வாழமுடியாத அளவிற்கு சிதைத்தது. 32 நாட்களில் காசாவில் 15 லட்சத்து 20 ஆயி ரம் (70 சதவிகிதத்திற்கும் அதிகமான) மக்களை வடக்குப் பகுதியில் இருந்து தெற்குப் பகுதி நோக்கி துரத்தியடித்துள்ளது. “போர் துவங்கிய 31 ஆவது நாளில் காசா பகுதியை இரண்டாக பிரித்து சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகிறோம். அதன் தலை நகரை நெருங்கி விடுவோம்” என அறி வித்திருக்கும் இஸ்ரேல் ராணுவம், பாலஸ்தீனர்கள் அனைவரையும் காசா எகிப்து எல்லையான ரஃபா வழியாக அப்பகுதியி லிருந்து ஒட்டு மொத்தமாக வெளியேற்றி, காசாவை தனது பிடிக்குள் கொண்டுவர இஸ்ரேல் முழுமூச்சாக இறங்கியுள்ளது.
அடிப்படை ஆதாரங்கள் குறிவைத்து அழிப்பு
எந்த பகுதியிலும் மக்கள் வாழ்வதற்கு குடிநீர், மின்சாரம் முக்கியமானது என்ற நிலையில், காசா பகுதியில் அந்த அடிப்படை ஆதாரங்களையும் இஸ்ரேல் அழித்துள்ளது. குடிநீர் தொட்டிகள், சூரிய மின் உற்பத்தி அமைப்புகள் மீது, குண்டுகளை வீசியும், விவ சாய நிலங்களில் பூச்சிக்கொல்லிகளை ஊற்றி யும் இஸ்ரேல் அழித்துள்ளதாக காசா பகுதி யில் உள்ள விவசாய அமைச்சகம் தெரி வித்துள்ளது.
1.82 லட்சம் பேர் வேலை இழப்பு
இஸ்ரேல் - ஹமாஸ் போர் துவங்கியதில் இருந்து காசா பகுதியைச் சேர்ந்த பாலஸ்தீனர் களுக்கு 61 சதவிகித வேலை வாய்ப்புகள் பறி போயுள்ளன. இந்த பொருளாதாரவீழ்ச்சி ‘பல ஆண்டுகளுக்கு’ எதிரொலிக்கும் என்று ஐக்கிய நாடுகளின் தொழிலாளர் நிறுவனம் எச்சரித்துள்ளது. பாலஸ்தீனியப் பிரதேசத்தில் மதிப்பிடப் பட்ட வரை 1 லட்சத்து 82 ஆயிரம் வேலை இழப்பு கள் ஏற்பட்டுள்ளன என சர்வதேச தொழி லாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. போர் தொடர்ந்தால் இந்த நிலை மேலும் மோசமடை யும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பின் அரபு நாடுகளுக்கான பிராந்திய இயக்குநர் ரூபா ஜராடத் தெரிவித்துள்ளார். இஸ்ரேலின் முற்றுகையால் காசா பகுதியில் 2005 முதலே அதிக வேலை வாய்ப்பின்மை நிலவி வருகிறது 2023 இல் வேலைவாய்ப்பின்மை 46.4 சதவிகிதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
போர்களுக்குள் வாழும் குழந்தைகள்
தடை செய்யப்பட்ட வெடிகுண்டுகளைப் பயன் படுத்தி இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலை தாக்குதலில் கட்டட இடிபாடுகளிலும், வெடி குண்டுகளின் நேரடியான தாக்குதலிலும் சிக்கி படுகாயங்களுடன் உயிர் பிழைத்த பலநூறு குழந்தைகள் வெடிகுண்டின் வீரியத்தில் உடல் முழுவதும் கருகி எரிந்தும், உடல் பாகங்கள் சிதைந்தும் நிரந்தர குறைபாடு உள்ளவர்களாக மாற்றப்பட்டுள்ளனர். 24 லட்சம் மக்கள் தொகை கொண்ட காசா வில், 50 சதவிகிதம் வரையிலானோர் 18 வயதிற்கு உள்ளான குழந்தைகள். இந்த குழந்தைகள் தங்கள் வாழ்நாளில் 2008 முதல் 2023 வரையிலான 15 ஆண்டுகளில் மட்டும் 5 போர்களால் நேரடி யாக மிகக் கொடூரமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் போர்களினால் ஏதோ ஒரு வகையில் மன ரீதியான தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்ட வர்கள். பல குழந்தைகள் கொலையும் செய்யப்பட்டன. 2008-2009- இல் நடைபெற்ற 23 நாள் போரில் 341 குழந்தைகள் கொல்லப்பட்டனர். 2012-இல் நடைபெற்ற 8 நாள் போரில் 35 குழந்தை கள் கொல்லப்பட்டனர். 2014-இல் நடைபெற்ற 50 நாள் போரில் 532 குழந்தைகள் கொல்லப் பட்டனர். 2021-இல் நடைபெற்ற 11 நாள் போரில் 66 குழந்தைகள் கொல்லப்பட்டனர். தற்போது 2023 ஆம் ஆண்டு நடைபெற்று வரும் போரில் 29 நாட்களில் மட்டும் 4100-க்கும் அதிகமான குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மாதவிடாயை தாமதப்படுத்த மாத்திரைகள்
காசாவில் இஸ்ரேலால் உருவாக்கப் பட்டுள்ள சுகாதாரமற்ற சூழ்நிலைகள் காரண மாக பல பாலஸ்தீனப் பெண்கள் மாதவிடாயைத் தாமதப்படுத்தும் மாத்திரைகளை உண்ணும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இடப்பெயர்வு, உயிரைப் பாதுகாக்க குறுகிய இடத்தில் நெரிசலான வாழ்க்கை நிலைமை மற்றும் தண்ணீர், சானிட்டரி நாப்கின்கள் மற்றும் டம்பான்கள் பற்றாக்குறை உருவாக்கப்பட்டு உள்ளதால் பெண்கள் நோரெதிஸ்டிரோன் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இதனால் எதிர்காலத்தில் அப்பெண்கள் வேறு பல மருத்துவ பிரச்சனைகளை எதிர்கொள்வார்கள் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேற்குக் கரையிலும் கொலைகள்
ஹமாஸ் குழுவினருடன் தொடர்பில்லாத பகுதியாக கூறப்படும் மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமிலும் இஸ்ரேல் ஆக்கிரமிப்புப் படைகளால் அதிரடி நடவடிக்கை என்ற பெயரில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு போராட்டம் நடத்திய மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் உட்பட 155 பாலஸ்தீனியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 2,150 பாலஸ்தீனியர்கள் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையின் பல்வேறு பகுதிகளில் இருந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பத்திரிகையாளர்கள் 46 பேர் படுகொலை
தனது போர்க் குற்றங்களை வெளியுலகிற்கு கொண்டு சேர்க்கிறார்கள் என்ற ஆத்திரத்தில், முற்றிலுமாகவும் மீண்டும் செயல்பட முடியாத வகையிலும் 109 பத்திரிகை அலுவலகங்களை குண்டுகளை வீசி சிதைத்துள்ளது. 46 ஊடகவியலாளர்களையும் படுகொலை செய்துள்ளது.
குழந்தைகளுக்கு சுடுகாடாக மாறும் காசா
ஐநா பொதுச்செயலாளர் வேதனை
இஸ்ரேலின் தாக்குதலால், காசா பகுதி குழந்தைகளின் மயானமாக மாறிவருவதாக ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்செயலாளர் அந்தோணியா குட்டரெஸ் வேதனை தெரிவித்துள்ளார். “காசா குழந்தைகளுக்கு சுடுகாடாக மாறியுள்ளது. உடனடியாக போர் நிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டும். இது அனைத்து நாடுகளின் கடமை” என்று குட்டரெஸ் கூறியுள்ளார். “பணயக்கைதிகள் இப்பொழுதே விடுதலை செய்யப்பட வேண்டும் என்ற அதே நேரத்தில், காசாவில் உள்ள பொதுமக்கள், ஐ.நா. பாதுகாப்பு முகாம்கள், பள்ளிகள் பாதுகாக்கப்பட வேண்டும்; காசாவிற்குள் அதிகளவிலான மற்றும் அனைத்து மக்களுக்கும் தேவையான உணவு, தண்ணீர், மருந்துகள், மருத்துவமனைகள் இயங்கத் தேவையான எரிபொருட்கள் காசாவிற்குள் இப்பொழுதே பாதுகாப்பான முறையில் அனுப்பப்பட வேண்டும். அதற்கு தேவையான உதவிகளை நாடுகள் செய்யவேண்டும்” என்று குட்டரெஸ் குறிப்பிட்டுள்ளார்.