world

img

இஸ்ரேல் - ஹமாஸ் தற்காலிக போர் நிறுத்தம் துவங்கியது

காசா/டெல் அவிவ், நவ. 24 - இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் குழுவிற்கு இடையேயான அதிகாரப்பூர்வமான நான்குநாள் தற்காலிக போர்நிறுத்தம் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு துவங்கியது.

நவம்பர் 22 அன்று போர் நிறுத்தத்திற் கான அறிவிப்பு வெளியானபோதும், போர் நிறுத்தம் துவங்கும் நேரம் தாமத மாகி வந்த நிலையில் வெள்ளிக்கிழமை உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு துவங்கியதாக, இரண்டு தரப்பிற்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய கத்தார் அறிவித்துள்ளது.

போர் நிறுத்தத்தை தொடர்ந்து இஸ்ரேல் சிறைகளில் உள்ள பாலஸ் தீன  ஹமாஸ் கைதிகளில் விடுதலை செய்யப்பட இருக்கும் 300 பாலஸ்தீனிய கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் கொடுத் துள்ளது. இவர்களில் பலர் விசாரணை யின்றி இஸ்ரேல் காவலில் வைக்கப் பட்டுள்ளனர். 

இதில் முதல் 39 கைதிகள் வெள்ளிக் கிழமை இரவு 8 மணிக்கு விடுவிக்கப்படு வார்கள் என்றும், காசாவில் உள்ள பண யக்கைதிகள் இஸ்ரேலுக்கு வந்த பிறகே அவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்தது. சர்வதேச செஞ்சி லுவைச் சங்கம் (ICRC) காசாவில் இருந்து பணயக்கைதிகளை அழைத்து செல்ல உதவும் என்று கத்தார் கூறியுள்ளது.

ஹமாஸ் விடுதலை செய்ய இருக்கும் பணயக்கைதிகளின்  பட்டியலை இஸ்ரேல் பெற்றுள்ளதாகவும், அவர் களது குடும்பத்தினருக்கு அறிவித்து ள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்ச மின் நேதன்யாகுவின் அலுவலகம் வியா ழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த 4 நாள் போர் நிறுத்தத்தில் ஒவ்வொரு நாளும் உணவு, குடிநீர், மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான பொருட்கள் அடங்கிய 200 லாரிகளும்  மற்றும் நான்கு எரிபொருள் லாரிகளும் காசாவிற்குள் அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு பகுதிக்கு செல்பவர்கள் மீது தாக்குதல்

போர் துவங்கியதில் இருந்து வடக்கு காசா பகுதியில் வசித்து வந்த 10 லட்சத் திற்கும் அதிகமான பாலஸ்தீனர்களை தெற்கு பக்கம் நோக்கி துரத்திய இஸ்ரேல் ராணுவம், தற்போது போர் நிறுத்தம் துவ ங்கிய பிறகும் தெற்கு பகுதியில் இருந்து வடக்குப் பகுதியில் தங்களின் வீடுகள்  இருந்த பகுதியை நோக்கி யாரும் வரக் கூடாது என மிரட்டல் விடுத்திருப்பதாக வும் சில இடங்களில்  துப்பாக்கியால் சுட்டும், புகைக் குண்டுகளை வீசியும்  தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. 

யுத்தம் துவங்கிய அக்டோபர் 7 முதல் இதுவரை 6 ஆயிரம்குழந்தைகள், 4 ஆயிரம் பெண்கள் என 14 ஆயிரத்து 800 பாலஸ்தீனர்களை இஸ்ரேல் ராணுவம் கொன்று குவித்துள்ளது. 1 லட்சத்திற்கும் அதிகமான குடியிருப்புகளையும் அழித்துள்ளது குறிப்பிடத்தக்கது.