world

img

காசா மீது இஸ்ரேல் போர் சில முக்கிய கள நிகழ்வுகள்

u    இஸ்ரேலின் போர்க்குற்றங்களை ஆதரிப்பதால் மேற்கத்திய நாடுகள் உலகெங்கும்
தமது நம்பகத்தன்மையை இழந்து வருகின்றன எனவும் உக்ரைனுக்கு ஒரு நீதி; பாலஸ்தீனத்துகு ஒரு நீதி என்பது ஏன் என மக்கள் கேள்வி கேட்கின்றனர் எனவும்  பி.பி.சி.யின் முக்கிய நிருபர் ஜேம்ஸ் லன்டேல் தெரிவித்துள்ளார். 
u    இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக 24 பெண்களையும் 15 பதின்பருவ சிறுவர்களையும் விடுவித்துள்ளது. ஹமாஸ் 13 இஸ்ரேல் தேசத்தவர்
களையும் 10 தாய்லாந்து தேசத்தவர்களையும் விடுவித்துள்ளது.
u    பாலஸ்தீன மேற்கு கரையில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளுக்கு வந்து 
இஸ்ரேல் சிறையிலிருந்து வந்தவர்களை வரவேற்றனர். வீதிகளில் விழாக்கோலம்
காணப்பட்டது. இது ஹமாஸ் ஆதரவு உணர்வை வலுப்படுத்தும் என கூறப்படுகிறது.
u    சிறைக்கைதிகளையும் பணயக்கைதிகளையும் பரிமாற்றம் செய்வது வரவேற்பதாகவும் ஆனால் தான் ஹமாஸை நம்ப தயாராக இல்லை எனவும் ஜோ பைடன் கூறியுள்ளார். இது முதல் படிதான்; பொறுத்திருந்து பார்ப்போம் என்பது அவரது கருத்து.
u    போர் நிறுத்தம் பயன்படுத்தி கொண்டு 137 கனரக வாகனங்கள் உதவி பொருட்களு
டன் காசா பகுதிக்குள் சென்றுள்ளன என ஐ.நா. பிரதிநிதிகள் கூறியுள்ளனர். இதில் 1,29,000 லிட்டர் எரிபொருளும் 4 வண்டிகள் சமையல் வாயுவும் அடங்கும். 
u    இஸ்ரேல் தண்ணீரை முற்றிலும் துண்டித்துவிட்டதால் தாங்கள் கடந்த மாதம் இரு
முறைதான் அதுவும் உப்பு தண்ணீரில்தான் குளித்தோம் என பல பாலஸ்தீனிய குழந்தைகள் பத்திரிக்கைகளுக்கு பேட்டியளித்துள்ளனர்.
u    காசா மீது நடக்கும் போர் காரணமாக இஸ்ரேலுக்கு 48 பில்லியன் டாலர்கள் அதாவது 
ரூ4,08,000 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. கொலைவெறிக்கு அமெரிக்கா ஆதரவு தரும்வரை நிதிக்கு இஸ்ரேல் ஏன் தயங்க வேண்டும்?
u    ஸ்பெயினின் பார்சிலோனா நகர நிர்வாகம் இஸ்ரேலுடன் அனைத்து உறவுகளை
யும் துண்டித்து கொள்வதாக அறிவித்துள்ளது. இந்த நகரத்தை இடதுசாரிகள் ஆட்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
u    பாலஸ்தீனர்களை ஹிட்லர் படையினர் யூதர்களை கொன்றது போல ஹோலோகாஸ்ட் பாணியில் தீர்த்து கட்ட வேண்டும் என கோரும் விளம்பரங்களை முகநூலில் அனுமதித்ததாக மெட்டா நிறுவனம் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
u    இஸ்ரேலின் போர்க்குற்றங்களை ஸ்பெயினும் பெல்ஜியமும் விமர்சித்த காரணத்தால்
இஸ்ரேல் இந்த தேசங்கள் மீது கோபம் கொண்டுள்ளதாம்! தாம் என்ன கொலை வெறியாட்டம் ஆடினாலும் அனைவரும் ஆதரிக்க வேண்டும் என இஸ்ரேல் எதிர்பார்க்கிறதா?
u    பாலஸ்தீன மக்களை கைவிட்டதற்காக ஐரோப்பிய ஒன்றியத்தையும் அமெரிக்காவை
யும் உலகம் ஒரு போதும் மன்னிக்காது என ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் 
மிக் வாலஸ் நாடாளுமன்றத்தில் கடுமையாக பேசியுள்ளார்.
u    ஒரு குழந்தைக்கு மிகவும் ஆபத்தான இடம் உலகில் உள்ளது எனில் அது பாலஸ்தீன 
காசாதான் என ஐ.நா. குழந்தைகள் அமைப்பு யுனிசெஃப் முதன்மை அதிகாரி காதரின் ரஸ்ஸல் கூறியுள்ளார்.
u    “பாலஸ்தீனத்தில் குழந்தைகளும் பெண்களும் அப்பாவிகளும் கொல்லப்படு கின்றனர். ஐ.நா.உட்பட எவரது பேச்சையும் கேட்க இஸ்ரேல் தயாராக இல்லை. 
இது இனப்படுகொலை இல்லையெனில் இதற்கு வேறு என்ன பெயர்? அமெரிக்காவுக்கு ஆதரவாக ஜப்பான் ஏன் இஸ்ரேலை ஆதரிக்க வேண்டும்?” என ஜப்பான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார் அகிக்கோ ஒய்ஷி எனும் இடதுசாரி பெண் உறுப்பினர். 
u    ஸ்காட்லாந்து கால்பந்தாட்ட கிளப் “செல்டிக்” ரசிகர்கள் பாலஸ்தீன கொடிகளை மைதானத்தில் காட்டியதற்காக உலக கால்பந்தாட்ட அமைப்பு செல்டிக் மீது பல 
அமெரிக்க டாலர்கள் அபராதம் விதித்துள்ளது. இது மேற்கத்திய பிராண்ட் ஜனநாயகம்.
u    4 நாள் போர் நிறுத்தம் என்பது காசாவின் ரத்தம் வழியும் காயத்துக்கு “பேண்ட் எய்ட்” போடுவதற்கு சமம் என ஆக்ஸ்ஃபோம் நிறுவனம் கூறியுள்ளது. 
u    காசாவில் குடிநீர் மற்றும் உணவு பற்றாக்குறையால் 70,000 பேருக்கு சுவாசக் கோளாறுகள்/ 44,000 வயிற்றுப் போக்கு/ 800 அம்மை நோய்/ 14,000 பேருக்கு தோல் நோய்கள் உருவாகியுள்ளன. இது இன்னும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது என
வும் பாதிக்கப்படுவதில் பாதிக்கும் அதிகமானவர்கள் குழந்தைகள் எனவும் பாலஸ்தீன காசா பகுதியில் உள்ள உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி ரிச்சர்ட் 
பீப்பர்கார்ன் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
u    ஸ்பெயின் நாட்டின் பிரதமர் சான்சஸ், இஸ்ரேல் சென்று பெஞ்சமின் நேதன்யாகுவை
சந்திப்பது இஸ்ரேலின் போர்க்குற்றங்களை மறைப்பதற்கு சமம் என இடதுசாரி பொடமாஸ் அமைப்பின் பொதுச் செயலாளரும் சமீபத்தில் இஸ்ரேல் எதிர்ப்புக்காக
அமைச்சர் பதவி நீக்கம் செய்யப்பட்டவருமான அயன் பெல்லாராவிமர்சித்துள்ளார்.
u புகழ்பெற்ற அல்ஜசீராவின் காசா முதன்மை ஊடகவியலாளர் வேயல்-அல்- தாஹ்தோவின் மனைவி/மகன்/மகள் மற்றும் பேரக்குழந்தை இஸ்ரேலின் குண்டுவீச்சில் பலியாகினர். இதுவரை 50க்கும் அதிகமான ஊடகவியலாளர்கள் மற்றும் 150க்கும் அதிகமான குடும்ப உறுப்பினர்கள் இஸ்ரேலின் குண்டுவீச்சில் கொல்லப்பட்டுள்ளனர். 
u    கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் கொல்லப்பட்டதாக 
கூறப்படும் கணிசமானவர்கள் இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர் என்பதற்கான ஆதாரங்கள் மேலும் மேலும் வெளிவருகின்றன. ஹமாஸ் அமைப்பினரை கொல்லும் பொழுது பல இஸ்ரேலியர்களையும் குறிப்பாக ஹமாஸ் அமைப்பினருடன் இருந்த இஸ்ரேலிய பணயக்கைதிகளை ராணுவம் கொன்றது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
u    காசாவை அழிப்பதோ அல்லது பாலஸ்தீன இன அழிப்பிலோ இஸ்ரேல் ராணுவம் ஈடுபடவில்லை என அமெரிக்க ஜனாதிபதியின் பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி கூறுகிறார். ஆனால் பல இஸ்ரேல் அரசியல் ராணுவ தலைவர்கள் பாலஸ்தீனர்கள்
அனைவரையும் வாய்ப்பிருந்தால் கொல்ல வேண்டும் எனவும் அவர்களை காசாவிலிருந்து சினாய் பாலைவனத்துக்குள் துரத்த வேண்டும் எனவும் பகிரங்கமாக கூறிவருகின்றனர்.

- அ. அன்வர் உசேன்