world

img

டிச.27 முதல் இஸ்ரேலில் கொரோனா தடுப்பூசி

இஸ்ரேலில் டிசம்பர் 27 ஆம் தேதி முதல்  பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் அறிவித்துள்ளார்.

கொரோனா நோய்கான தடுப்பு மருந்தை தயாரிக்கும் பணியில் பல்வேறு உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. 
இங்கிலாந்தில் பைசர்-பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசியை அவசர தேவைகளுக்கு பயன்படுத்த பிரிட்டன் அரசு அனுமதி வழங்கியுள்ளதையடுத்து, அங்கு தற்போது பொது மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், பைசர் நிறுவனத்திடமிருந்து கொரோனா தடுப்பூசிகளின் முதல் தொகுதி தற்போது வந்துள்ளதாக, அந்நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹு தெரிவித்துள்ளார். 
மேலும், வரும் 27 ஆம் தேதி முதல் இஸ்ரேலில் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு சுமார் 60,000 பேருக்கு தடுப்பூசியை செலுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

;