பாலஸ்தீன மக்களைத் தாக்கி இஸ்ரேல் ராணுவம் இனப் படுகொலையை நடத்தி வருவதை கண்டித்து உலகம் முழுவதும் பல நாடுகளில் மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.
ஹமாஸ் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்வதாகக் கூறிக்கொண்டு அக்டோபர் 7 அன்று காசா மீது போர் அறிவிப்புச்செய்த இஸ்ரேல், பாலஸ்தீன மக்களின் மீது தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட குண்டுகளை பாலஸ்தீனர்களின் மீது வீசிவந்த இஸ்ரேல் தற்போது காசாவிற்குள் நுழைந்து தரைவழி தாக்குதலை துவங்கியுள்ளது.
தரைவழி தாக்குதலிலும் பீரங்கி களை கொண்டு பாலஸ்தீனர்களின் வீடுகள் மீதும் உயிரை காப்பாற்றிக் கொள்ள வேறுபகுதிக்கு இடம் பெயர் பவர்களின் மீதும் தாக்குதலை தொடுத்து இனப்படுகொலை செய்து வருகிறது.
ஐ நா பாதுகாப்பு அவையிலும் போரை நிறுத்த தீர்மானங்கள் கொண்டு வந்த போதும் இஸ்ரேல் தனது போர்க் குற்றங்களையோ இனப்படுகொலையையோ நிறுத்த எந்த நடவடிக்கையையும் எடுக்க வில்லை.மாறாக தனது போர்க் குற்றங்களை உலகிற்கு தெரியாமல் மறைத்து வருகிறது.
இஸ்ரேலின் இத்தகைய போர்க் குற்றங்களை கண்டித்தும் போரை நிறுத்த வலியுறுத்தியும் யூதர்கள், கிறிஸ்துவர்கள் என வேறுபாடுகள் கடந்து அனைத்து தரப்பு மக்களும் லட்சக்கணக்கில் உலகம் முழுவதும் கடந்த இரண்டு வாரங்களாக போ ராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலஸ்தீனத்திற்கு ஆதரவான கோசங்கள், பேரணிகள்,பாலஸ் தீனக் கொடி என அனைத்திற்கும் ஐரோப்பிய நாடுகள் தடை விதித் துள்ள போதிலும் பிரான்ஸில் லட்சக் கணக்கான மக்கள் தடைகளை உடைத்து மாபெரும் பேரணி நடத்தினர்.ஞாயிற்றுக்கிழமை யன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், கராச்சி, குவெட்டா உள்ளிட்ட நகரங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆயி ரக்கணக்கான மக்கள் கடலென திரண்டு பாலஸ்தீன ஆதரவு பேரணி நடத்தினர்.இஸ்லாமாபாத்தில் நடை பெற்ற போராட்டத்தில் இஸ்ரேலால் பாலஸ்தீன குழந்தைகள் படு கொலை செய்யப்படுவதை குறிக் கும் வகையில் பெண்கள் பாதிக் கப்பட்ட குழந்தைகளை கையில் ஏந்தியது போல பேரணியில் பங்கேற்றனர்.
லெபனான் தலைநகர் பெய்ரூட் டில் பல்லாயிரம் நபர்கள் ஒன்று கூடி தாக்குதலைக் கண்டித்து இஸ்ரே லின் கொடியை எரித்து எதிர்ப்பு தெரிவித்தனர்.கிரீஸ் தலைநகர் ஏதென்ஸில் 5,000க்கும் அதிக மான பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் என அந்நாட்டு காவல் துறை தெரிவித்துள்ளது. ஸ்பெயின்,மொராக்கோ, ஆஸ் திரேலியா,போலந்து ஆகிய நாடுக ளின் தலைநகரங்களில் லட்சக் கணக்கான பொது மக்கள் பாலஸ் தீனர்களுக்கு ஆதரவாகவும் இஸ்ரே லின் போர்க்குற்றங்களை கண்டித் தும் பேரணி நடத்தினர்.