- அல் ஜசீரா பத்திரிகையாளர் சமீர் அபுதாக்கா இஸ்ரேல் குண்டு வீச்சில் உயிரிழந்துள்ளார். இஸ்ரேல் திட்டமிட்டு பத்திரிகையாளர்களை தாக்குவது இல்லை என அமெரிக்க பாதுகாப்பு அலோசகர் ஜான் கிர்பி சப்பைக்கட்டு கட்டியுள் ளார். சமீரின் மகன் இந்த படுகொலையை எதிர்த்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக அறிவித்துள்ளார்.
- இஸ்ரேல் உளவுத் துறையான மொசாத்தின் முன்னாள் தலைவர் டேவி பெர்னியா கத்தார் பிரதமரை சந்தித்து ஹமாஸ் வசமுள்ள மீதி பணயக் கைதிகள் விடுவிப்பு பற்றி பேசியுள்ளார். நெதன்யாகு இதனை ஏற்றுக்கொள்வாரா?
- தங்களது ராணுவம் தவறுதலாக மூன்று பணயக் கைதிகளைகொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இது இஸ்ரேலில் கடும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. பணயக்கைதிகளின் உறவினர்கள் வீதிகளுக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.
- u பல அமெரிக்க பாலஸ்தீன குடும்பங்கள் இஸ்ரேலின் போர்க் குற்றங்களுக்கு உதவுவதாக பைடன் மீது வழக்கு தொடுத்துள்ளனர்.
- அமெரிக்காவின் முற்போக்கு செனட் சபை உறுப்பினர் பெர்னி சாண்டர்ஸ் இஸ்ரேல் குண்டுவீச்சு பற்றி பைடன் நிர்வாகம் செனட் சபையில் அறிக்கை வைக்க வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்துள்ளார். அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் மனித படுகொலைகள் அரங் கேற்றப்பட்டு வருகின்றன என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
- நெதர்லாந்து / ஜெர்மனி தேசங்களின் இரு பெரிய கப்பல் நிறுவனங்கள், செங்கடல் வழியாக எந்த பொருளையும் இஸ்ரேலுக்கு கொண்டு செல்வதில்லை என அறிவித்துள் ளன. ஏமனின் ஹவுதி அமைப்பினர் இஸ்ரேலுக்கு செல்லும் கப்பல்கள் ஐந்தை பறிமுதல் செய்துள்ளதன் விளைவு இது!
- ராஃபா எல்லை வழியாக காசாவுக்கு நிவாரணப் பொருட்கள் அனுப்ப முடியாத அளவுக்கு அங்கு இஸ்ரேல் குண்டு வீசி வருகிறது. எனவே சர்வதேச நிர்ப்பந்தம் காரணமாக கேரம் ஷலோம் எல்லைப் பகுதியை திறக்க இஸ்ரேல் இசைந்துள்ளது.
- காசா மக்களை பலவந்தமாக அகற்ற இஸ்ரேல் முயன்றால் அதன் விளைவுகள் படுபயங்கரமாக இருக்கும் என ஈரான் எச்சரித்துள்ளது. இந்த எச்சரிக்கையெல்லாம் நேதன் யாகுவை அசைக்குமா? u சிரியா/ ஈராக்கில் உள்ள அமெரிக்கத் தளங்கள் மீது பாலஸ்தீன ஆதரவு எதிர்ப்பு இயக்கங்கள் நடத்திய தாக்குத லில் கடும் சேதங்களை உருவாக்கியுள்ளன என்பதை செயற்கை கோள் புகைப்படங்கள் வெளிப்படுத்தியுள்ளன.
- காசாவின் மீது தாக்குதல்கள் நிறுத்த உடனடியான வேகமான நடவடிக்கைகள் தேவை என ஈரான்/ சவூதி அரேபியா/ சீனா கூட்டாக வலியுறுத்தியுள்ளன.
- அ.அன்வர் உசேன்