இஸ்ரேல் ராணுவம் தனது கொலை வெறித்தனமான தாக்குதலில், வெள்ளைக்கொடி பிடித்து இருந்த மூன்று இஸ்ரேல் பணயக்கைதிகளை கொலை செய்தது. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் பிரத மர் நேதன்யாகுவிற்கு எதிராக பணயக்கைதி களின் குடும்பத்தினர் மற்றும் இஸ்ரேல் மக்கள் டெல் அவிவ்,ஜெருசலேம்,ஹபிபா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பெரும் போராட்டங்களை நடத்தினர். போரை நிறுத்தி பணையக்கைதி களை மீட்க பேச்சுவார்த்தை நடத்துமாறு வலியுறுத்தினர்.