world

img

காசா மீது இஸ்ரேல் போர் சில முக்கிய கள நிகழ்வுகள்

u 7 பெண்கள் மற்றும் குழந்தைகளும் மேலும் இஸ்ரேல் குண்டு வீச்சில் கொல்லப்பட்ட  3 பணயக்கைதிகளின் உடல்களையும் தர முன்வந்த பொழுது இஸ்ரேல் மறுத்துவிட்டது என ஹமாஸ் கூறியுள்ளது. இஸ்ரேலின் குண்டு வீச்சில் பல பணயக்கைதிகள் கொல்லப்பட்டனர் என ஹமாஸ் தொடர்ந்து கூறிவருகிறது. u ஐ.நா.வில் இஸ்ரேல் நிரந்தர தூதர் கிலியட் எர்டன் பாதுகாப்பு கவுன்சிலில் பேசும் பொழுது இஸ்ரேல் சமாதா னத்துக்காக முயல்வதாகவும் பாலஸ் தீனம்தான் போருக்கும் பயங்கர வாதத்துக்கும் முயல்கிறது எனவும் பேசியுள்ளார். 6,000 குழந்தைகள் உட்பட 15,000 பேரை 30 நாட்களில் கொன்றுவிட்டு தான் சமாதானவாதி என அழைத்து கொள்வதற்கு அசா த்திய மன வலிமையும் துணிச்சலும் வேண்டும்.

u 29.11.2023 அன்று பாலஸ்தீன ஒருமைப்பாடு உலகம் முழுதும் கடை பிடிக்கப்பட்டது. ஒரு நிகழ்ச்சியில் பேசிய பகரைன் நாடாளுமன்ற உறுப்பினர் முகம்மது மூசா அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமெரிக்கா/பிரான்சு/பிரிட்டன் தூதர்களை குறிப்பிட்டு இஸ்ரேலுக்கு பாலஸ்தீனியர்களை கொல்ல அனைத்து ஆயுதங்களை யும் தந்துவிட்டு இங்கேயும் பங்கேற்பது என்பது ஒரு மனிதனை கொலை செய்துவிட்டு அவனது இறுதி சடங்குக்கு வந்து மரியாதை செய்வது போல உள்ளது என கூறினார். எனி னும் இது தமது சொந்த கருத்து; பஹ் ரைன் அரசு கருத்து அல்ல எனவும் மறவாமல் கூறினார். பகரைனுக்கும் இஸ்ரேலுக்கும் நல்லுறவு உள்ளது.

u29.11.23 அன்று ஜெனின் பகுதியில் 12 வயது பாலஸ்தீன சிறுவனை இஸ்ரேலிய ராணுவம் சுட்டுக்கொன் றது. இதனை நியாயப்படுத்திய ஜெரு சேலம் துணை மேயர் ஹசன் நகவும் இஸ்ரேல் சிறைகளிலிருந்து விடுதலை யானவர்களை வரவேற்று கொண்டாட க்கூடாது எனும் ஒப்பந்தத்தை மீறிய தற்காக அந்த சிறுவன் கொல்லப் பட்டது சரியே என கூறினார். விடுதலை அடைவதை கொண்டாடுவது தவறா? இஸ்ரேலின் அகராதியில் ஆம்!

u எனினும் ஹமாஸ்- இஸ்ரேல் தற்கா லிக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அப்ப டிப்பட்ட விதி எதுவும் இல்லை. இஸ் ரேல் தானாக அப்படி ஒரு ஆணையை வெளியிட்டுவிட்டு கொலையும் செய்து அதனை நியாயப்படுத்தியும்பேசுகிறது.

u தற்காலிக போர் நிறுத்தப்பட்டதை முன்னிட்டு பாலஸ்தீனம் அல் நசர் மரு த்துவமனைக்கு வந்த பத்திரிகை யாளர்கள்  பல குறைபிரசவ சிசுக்கள் இறந்து உடல்கள் அழுகி கொண்டி ருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர். மருத்துவமனை ஊழியர்களை இஸ்ரேல் ராணுவம் பலவந்தமாக வெளியேற்றியது மட்டுமல்ல; அந்த குழந்தைகளுக்கு மாற்று ஏற்பாடு களையும் செய்யவில்லை.

u விரைவில் காசா பகுதிக்கு போதுமான உணவுப்பொருட்கள் அனுப்பாவிட்டால் அங்கு பஞ்சம் தலைவிரித்தாடுவது தவிர்க்க முடியாது என ஐ.நா.சபை உணவு பிரிவு எச்சரித்துள்ளது.

u காசாவில் கடந்த 50 நாட்களில் நடப்பது கடந்த 75 ஆண்டுகளாக நடக்கும் அநீதிகளின் தொகுப்புதான் என ஈரான் ஜனாதிபதி ரெய்சி கூறினார். u1975ம் ஆண்டு இயற்றப்பட்டு 1991ல் திரும்ப பெறப்பட்ட “சியோனிசம் ஒரு இனவெறி தத்துவம்; அது இன வேற்றுமைகளை முன்வைக்கிறது” எனும் ஐ.நா. தீர்மானம் இஸ்ரேலின் நடவடிக்கைகள் காரணமாக மீண்டும் நிறைவேற்ற வேண்டும் என ஐ.நா.சபையில் ஈரான் வலியுறுத்தியுள்ளது.