world

img

இஸ்ரேல் பிரதமர் பதவி விலக வலியுறுத்தி 5 லட்சம் இஸ்ரேலியர்கள் போராட்டம்

இஸ்ரேல் பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி 5 லட்சம் இஸ்ரேலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த ஓர் ஆண்டாக போர் நடைபெற்று வருகிறது.

சர்வதேச சட்டங்கள் எதையும் மதிக்காமல் இஸ்ரேல் ராணுவம் காசாவில் மிக கொடூரமாக தாக்குதல்களை நடத்தி வருகிறது.

இந்நிலையில், காசாவில் பணையக் கைதிகளாக உள்ள மற்றும் காணாமல் போன இஸ்ரேலியர்களின் குடும்பத்தினர் ஒரு கூட்டமைப்பாக இணைந்து இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவை பதவி விலக வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இஸ்ரேல், டெல் அவிவ் நகரத்தில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.