world

img

இலங்கையின் இன்றைய சீரழிவிற்கு தாராளமய பொருளாதாரமே காரணம்!

கொழும்பு, மே 11 - ராஜபக்சே குடும்பம், இலங்கை யின் ஆட்சிப் பொறுப்பிலிருந்து வெளியேற வேண்டும் என வலியுறுத்தி இலங்கையில் போராட்டம் தொடர்ந்து வருகிறது. மகிந்த ராஜபக்சேவைத் தொடர்ந்து ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவும் பதவி விலக வேண்டும் என்ற முழக்கம் அங்கு வலுப்பெற்றுள்ளது. இதனிடையே, இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்துக் கிளம் பியதற்கான காரணம் குறித்து, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின்  (CPSL) பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.வீரசிங்க  ஊடகங்களுக்கு விரி வான பேட்டி ஒன்றை அண்மையில் அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது: கோத்தபய ராஜபக்சே நிர்வாகம்  தாராளமய சந்தைப் பொருளாதா ரத்துடன் தொடர்ந்து செயல்பட் டது. இது நாடு எதிர்நோக்கும் பிரச்ச னைகளை அதிகப்படுத்தியது. இறுதியில் அதுவே தற்போது அர சாங்க எதிர்ப்புப் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது.

அரசின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டு மக்களையும், பொருளாதாரத்தையும் மோசமாகப் பாதிக்கிறது என்று கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து கூறி வந்தது. இந்தப் பின்னணியிலேயே, இலங்கை ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இலங்கையில் சில பத்தாண்டு களுக்கு முன்பே பொருளாதார தாராளமயம் தொடங்கிவிட்டது. இலங்கை ஏற்றுமதி சார்ந்த பொரு ளாதாரமாக இருக்கும் என்று நம்பி யதன் அடிப்படையில், ஒப்பீட்ட ளவில் இலவச இறக்குமதி மற்றும் ஏற்றுமதிகளை அனுமதித்தது. ஆனால், இலங்கை இப்போது ஏற்றுமதி செய்வதை விட அதிகமாக இறக்குமதி செய்கிறது. கடந்த 25 முதல் 30 வருடங்களில் சுற்றுலா வருவாய், வெளிநாட்டுக் கடன்கள் மூலம் ஏற்றுமதி - இறக்கு மதிக்கு இடையிலான இடைவெளி குறைக்கப்பட்டது. ஆனால், கொரோனா தொற்றுநோயால், சுற்றுலா வருவாய் பாதிக்கப்பட்ட தோடு, எளிதாக கடன்களைப் பெற முடியாத நிலையும் இலங்கை அரசுக்கு உருவானது. அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடியால் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

அது  மின்வெட்டு வரை நீடிக்கிறது. இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி உட்பட அரசாங்கத்தில் அங்கம்  வகிக்கும் 11 கட்சிகள், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளு மன்றத்தில் அனைத்துக் கட்சி களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இடைக்கால அர சாங்கத்தை நியமிக்குமாறு ஜனாதி பதியிடம் கோரிக்கை விடுத்திருந்  தோம். இருப்பினும், அது செய்யப் படவில்லை, எதிர்ப்பாளர்கள் இதை ஏற்கத் தயாராக இல்லை. ஜனாதிபதி வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று மட்டுமே அவர்கள் விரும்புகின்றனர். ‘கோத்தபய கோ ஹோம்’ என  ஆர்ப்பாட்டக்காரர்கள் முழக்கமிடு கின்றனர். இந்த முழக்கம் மூலம் அனைத்து அதிகாரங்களையும் கையில் வைத்துள்ள ஜனாதிபதியின் கொள்கைகளையும், தேர்தல் நடைமுறையையும் அவர்கள் விமர்சிக்கின்றனர். முதற்கட்டமாக இப்போது என்ன செய்ய வேண்டுமோ, அதைச் செய்ய  வேண்டும். பின்னர் யார் பொறுப் பிற்கு வந்தாலும் தற்போதைய பொருளாதார, சமூக மற்றும் அர சியல் நெருக்கடியில் இருந்து இலங் கையைக் காப்பாற்றுவதற்கான ஒருமித்த கருத்தை உருவாக்க அனைத்து அரசியல் கட்சிகளுடனும் அவர்கள் இணைந்து பணியாற்ற வேண்டும்  என்றார்.

 ‘ஐ லாண்ட்’ இணைய இதழ் செய்தியாளர் ரதீந்திர குருவிட்ட-விற்கு அளித்த பேட்டி.