இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே இன்று பதவியேற்றுக் கொண்டார்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்குப் பொறுப்பேற்று பிரதமராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். போராட்டம் தீவிரமானதால் நாட்டைவிட்டு வெளியேறிய அவர், பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். முன்னதாக, கடந்த 13-ஆம் தேதி இடைக்கால பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை கோத்தபய ராஜபக்சேவை நியமித்தார்.
இந்நிலையில், புதிய பிரதமரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இதில், இடைக்கால பிரதமரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவருமான ரணில் விக்ரமசிங்கே, ஆளும் இலங்கை பொதுஜன பெரமுன கட்சியின் அதிருப்தி எம்.பி டலஸ் அழகப்பெரும, ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் அனுர குமார திசநாயகே ஆகியோர் போட்டியிட்டனர்.
225 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் 223 பேர் வாக்களித்தனர்.அவற்றில் 4 வாக்குகள் செல்லாதவை என்று அறிவிக்கப்பட்டன.219 வாக்குகள் மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு எண்ணப்பட்டன.
அதில், ரணில் விக்ரமசிங்கே 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.டலஸ் அழகப்பெரும 82 வாக்குகளைப் பெற்றார். அனுரா குமார 3 வாக்குகள் மட்டுமே பெற்றார். தேர்தல் முடிவுகளை நாடாளுமன்ற அவைத்தலைவர் மகிந்த யாபா அபயவர்தன அறிவித்தார்.
இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் முதன்முறையாக பிரதமராக ரணில் விக்ரமசிங்கே இன்று காலை பதவியேற்றுக் கொண்டார்.