world

இலங்கையில் தேசிய அரசாங்கம் அமையும் வாய்ப்புகள் என்ன?

கொழும்பு, மே 10 - மகிந்த ராஜபக்சே-வின் ராஜினாமா ஏற்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் வர்த்த மானி செவ்வாயன்று அறிவிப்பு வெளி யிட்டுள்ளது. இதையடுத்து, இலங்கை நாடாளு மன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேவிடம் சபாநாயகர் மகிந்த  யாப்பா அபேவர்தன கோரிக்கை விடுத்துள் ளார்.  மே 17ஆம் தேதிக்கு முன்னதாக நாடாளு மன்றத்தை கூட்ட வேண்டும் என்றும் எதிர்க் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. இலங்கையில் யார் புதிதாக ஆட்சியமைத்தா லும், சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கடன் பெறுவதுதான் முக்கியமான பணியாகும். நாட்டின் கடன் வாங்கும் உச்சவரம்பை அதிகரித்து தீர்மானம் கொண்டு வந்து அதை  நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டு மானால் பெரும்பான்மை வேண்டும். இப்போது அரசிடம் பெரும்பான்மை இல்லை. தேசிய அரசு அமைத்தால்தான் இதை நிறைவேற்ற முடியும். அப்படி நிறைவேற்றினால் தான் கடன் வாங்க முடியும். ஆனால், அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக, இலங்கையில் அடுத்து  என்ன நடக்கும் என்று அரசியல் ஆய்வாளர் நிக்சன், ‘பிபிசி தமிழுக்கு’ பேட்டி ஒன்றை  அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்ப தாவது:

இலங்கையின் பிரதமர் பதவி விலகிய நிலையில், முழு அமைச்சரவையும் இல்லாது போன பின்னணியில், ஜனாதிபதி எதிர்வரும் 24 மணிநேரத்திற்குள் புதிய அமைச்சரவையை நியமித்தாக வேண்டும். ஆனால், இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகள் இன்னும் தயாராகவில்லை.  இடைக்கால அரசாங்கத்தை பொதுவாக தான் ஏற்காவிட்டாலும், வெளியில் இருந்து ஆதரவு வழங்க தயார் என எதிர்க்கட்சித் தலை வர் சஜித் பிரேமதாச முன்பு அறிவித்திருந்தார். ஆனால், திங்களன்று ஏற்பட்ட வன்முறை - குழப்பச் சூழ்நிலையில், இடைக்கால அர சாங்கத்திற்கு சஜித் பிரேமதாச ஆதரவு வழங்கு வதற்கான சாத்தியம் இனி இருக்காது என்று நிக்சன் உள்ளிட்ட அரசியல் நோக்கர்கள் கருது கின்றனர். “பிரதி சபாநாயகர் தேர்வுக்கு ஆதரவு வழங்கிய 148 பேரும் ஆதரவு வழங்கும் பட்சத்தில், கோத்தபய ராஜபக்சே இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும்.  ஆனால், கோத்தபய ராஜபக்சே-வே அர சாங்கத்தை மீண்டும் அமைக்கும் பட்சத்தில், சர்வதேச நிறுவனங்களிடமிருந்து இலங்கைக்கு நிதி உதவிகள் கிடைக்காது.

சர்வதேச நிதி உதவிகளை பெறுவதே இடைக்கால  அரசாங்கத்தின் முக்கிய நோக்கம் என்ற வகையில், அதுவல்லாமல் அரசாங்கம் அமைப்பதில் பலனில்லை.  மேலும், எதிர்க்கட்சியின் ஆதரவு இல்லாமல், ஒரு அரசாங்கத்தை கோத்தபய ராஜ பக்சே அமைப்பாரானால், அதனை இடைக்கால அரசாங்கம் என்று கூற முடியாது. அரசாங்கத்துடன், எதிர்க்கட்சிகளும் இணைந்து செயற்பட்டால் மாத்திரமே அதனை இடைக்கால அரசாங்கம் என கூற முடியும்.  இந்த நிலையில், சுயேச்சையாக செயல்பட்டு வரும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடல்களை நடத்தி, மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக நியமித்து, இடைக்கால அரசாங்கமொன்றை உருவாக்க ஜனாதிபதி முயற்சிக்கக்கூடும். ஆனால், மைத்திரிபால சிறிசேனவை பிரதமராக நியமித்து, புதிய இடைக்கால அரசாங்கம் உருவாக்கப்படும் பட்சத்தில், எதிர்க்கட்சிகள் தமது எதிர்ப்பை தெரிவிக்கும். எனவே, இப்போதைக்கு ஸ்ரீலங்கா ஜனவிமுக்தி பெரமுன புதிய அரசாங்கம் அமைப்பதற்கான சாத்தியங்களே தற்போது காணப்படுகின்றது.

எனினும், அரசாங்கத்தில் அங்கம் வகிப் போரின் வீடுகள், அலுவலகங்கள், ஹோட்டல் கள் என பல இடங்களில் தீக்கிரையாகி வருகின்ற  நிலையில், தற்போது ஆளும் அரசாங்கத்திற்கு யாரும் ஆதரவு வழங்க முன்வர மாட்டார்கள். ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சேபதவி விலகும் பட்சத்தில், அவரது பதவி அடுத்ததாக பிரதமருக்கு செல்லுமாறே அரசியலமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரதமரே பதவி  விலகிவிட்ட நிலையில், சபாநாயகரே அடுத்த ஜனாதிபதியாக பதவியேற்க வேண்டும். சபாநாயகரும் ஜனாதிபதி பதவியை ஏற்க மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில், உடனடியாக நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். நாடாளு மன்றத்தில் பெரும்பான்மை ஆதரவை கொண்ட ஒருவர், ஜனாதிபதியாக நியமிக்கப் பட வேண்டும். ஆனால் இவை எதற்குமே தற்போது சாத்தியமற்ற சூழ்நிலையே உள்ளது” என்று அரசியல் ஆய்வாளர் நிக்சன் குறிப்பிட்டுள்ளார்.