world

இலங்கை மக்களின் துயரம் அறிந்தவர்கள் இடைக்கால அரசில் இடம்பெற வேண்டும்!

கொழும்பு, மே 11 - இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி தனது நிலை பாட்டைக் கூறியுள்ள அதே நேரத்தில் இலங்கை அர சாங்கத்தில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் சார்பில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளு மன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச இலங்கை  கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகத்தில் நடந்த கலந்து ரையாடலில் பங்கேற்று உரையாற்றியுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: “நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவ ப்படுத்தும் இடைக்கால அரசு தேவை. தற்போது நில வும் சூழல் மாறிய பின் மக்கள் வாக்களித்து அவர்கள்  விரும்பும் அரசாங்கத்தை தேர்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டும்.  இந்த கொடுங்கோல் ஆட்சிக்குப் பதிலாக இடைக்கால அரசை அமைக்க வேண்டும். அதைத் தொடர்ந்து  நாட்டின் பொருளாதாரம் எதிர்நோக்கும் பேரழிவு நிலையை மாற்ற வேண்டும். அரசியல் ஸ்திரத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும். இது இலங்கையில் உள்ள பொறுப்புள்ள அரசியல் கட்சிகளின் பொறுப்பு.  நாட்டில் மக்கள் கருத்தைப் புறக்கணிக்கும் ஆட்சியை எந்த விதத்திலும் சரி செய்ய முடியாது என்று நாங்கள் நம்புகிறோம். ஆட்சியாளர்களின் நடவடிக்கைகளை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

இந்த ஆட்சி முழுமையாக அகற்றப்பட வேண்டும்.  அதே நேரத்தில் முற்போக்கு மற்றும் நல்லிணக்க அர சியல் சக்திகளின் ஒற்றுமையால் உருவாக்கப்பட்ட அனைத்துக் கட்சி, இடைக்கால அரசாங்கத்தை நோக்கி அது செல்ல வேண்டும். எங்கள் கூட்டணி இந்த நாட்டை சீர்குலைப்ப தற்காக செயல்படவில்லை.  அதற்கான நிகழ்ச்சி நிரலை உருவாக்கவில்லை.   மக்களால் வெறுப்பைச் சந்தித்துள்ள இந்த ஆட்சி யை அகற்ற வேண்டும். போலியான சீர்திருத்தம் வேண்டாம். நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்துடன் இடைக்கால அரசாங்கத்தை அமைக்க  வேண்டும். இந்த நேரத்தில் சமூகத்தை சீர்குலைக்கும் சக்திகளுக்கு எதிராக சமூகத்தை வழிநடத்தும் கோரி க்கையை  கையிலெடுங்கள் என்று தொழிற்சங்கத் தலைவர்களை  கேட்டுக்கொள்கிறோம். மேலும், மக்கள் படும் துன்பங்களை அறிந்த மக்கள் சார்பான கட்சிகளின் பிரதிநிதிகள் புதிய இடைக் கால அரசாங்கத்தில் இணைய வேண்டும்.” இவ்வாறு விமல் வீரவன்ச கூறியுள்ளார்.  இடதுசாரி ஜனநாயக முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார, பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி ஜீ. வீரசிங்க, லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண, கெவிந்து குமாரதுங்க  ஆகியோர் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.