world

img

கலவர பூமியாகிறது இலங்கை மாலத்தீவுக்கு தப்பினார் கோத்தபய

கட்டுப்படுத்த முடியாமல் ராணுவம் திணறல்

கொழும்பு, ஜூலை 13-  இலங்கையில் பெரும் கலவரம் நடந்து வருகிறது. அரசியல் குழப்பம் ஏற்பட்டு மக்களை கட்டுப்படுத்த முடி யாமல் ராணுவம் திணறு கிறது. பிரதமர் அலுவல கத்துக்குள் போராட்டக்காரர் கள் உள்ளே சென்று அங்கி ருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி யைத் தொடர்ந்து, மக்கள் கடந்த மார்ச் மாதம் முதல் தொடர் போராட்டங்களை நடத்திவந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ஜனாதி பதி கோத்தபய ராஜபக்சே வின் அதிகாரப்பூர்வ மாளி கைக்குள் புகுந்து போராட்ட த்தைத் தீவிரப் படுத்தினர். ஆனால், அதற்கு முன்பே இல்லத்தை விட்டு வெளியேறிய கோத்தபய,  ராணுவத் தலைமையிடத் தில் இருப்பதாகக் கூறப் பட்டது. மக்களின் போராட்  டம் தீவிரமடைந்ததை யடுத்து, தனது ஜனாதிபதி பதவியை புதனன்று  (ஜூலை 13) கோத்தபய ராஜினாமா செய்யவுள்ள தாக நாடாளுமன்ற அவைத் தலைவர் மகிந்த யாபா அபேவர்தனா தெரி வித்திருந்தார். இதைத் தொடர்ந்து கூட்டணி அரசை அமைப்ப தற்கான நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் துரிதப் படுத்தியுள்ளன. நாட்டின் புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் 20-ஆம் தேதி நடை பெறும் என்று தெரிவிக்கப் பட்டு இருந்தது.  இதுதொடர்பாக எதிர்க் கட்சிகள் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வரு கின்றன. கோத்தபய ராஜ பக்சே பதவி விலகிய பிறகு, நாடாளுமன்றத் தலைவர் அபேவர்தனா இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப் பட வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டது.

கோத்தபய மாலத்தீவுக்கு தப்பினார்

இந்நிலையில், கடற் படைக்குச் சொந்தமான மிகப்பெரிய படகு மூலம் கோத்தபய ராஜபக்சேவும், அவரது உறவினர்களும் திரிகோணமலை பகுதிக்கு வந்ததாகவும், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கொழும்பு சர்வதேச விமான  நிலையத்துக்கு வந்ததாக வும் தகவல்கள் கசிந்தன. கோத்தபய ராஜபக்ச புத னன்று அதிகாலை ராணுவ விமானம் மூலம் தனது  மனைவியுடன் இலங்கை யில் இருந்து புறப்பட்டு மாலத்தீவுக்குச் சென்றடைந் தார். அவருக்கு போலீஸ்  பாதுகாப்பும் வழங்கப் பட்டுள்ளது. இதனிடையே, இலங்கையில் தொடர்ந்து போராட்டம் நடந்து வரு கிறது. இதனால், அங்கு அவசர நிலையை அமல் படுத்தி பிரதமர் ரணில்  விக்கிரமசிங்கே உத்தர விட்டுள்ளார். அவர் பதவி விலக வலியுறுத்தி, அவரது வீட்டை முற்றுகையிட்டு போ ராட்டம் நடைபெறுகிறது. பிரதமர் அலுவலகத்தை யும் முற்றுகையிட்டனர். அலுவலகத்தின் நுழைவு வாயில் கதவையும் உடை க்கும் முயற்சி செய்தனர். இதனால், அங்கு கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை அகற்ற பாதுகாப்பு படை யினர் முயற்சி செய்த னர். தண்ணீர் பீய்ச்சியும், வானத்தை நோக்கி துப்பா க்கியால் சுடப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இலங்கையில் போராட் டம் தொடரும் நிலையில், அந்நாட்டின் தேசிய சேன லான ரூபவாஹினி ஒளி பரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. அதனையும் போராட்டக் காரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இதனிடையே இலங்கையின் இடைக்கால ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்கே நியமிக்கப் பட்டுள்ளதாக, அந்நாட்டு  சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தனா கூறியுள்ளார். 

மாலத்தீவு மக்கள் எதிர்ப்பு

இலங்கை ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சே தஞ்சம் புகுந்துள்ள மாலத்தீவில் அந்நாட்டு ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் மாலத்தீவு மக்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தால் கோத்தபய ராஜபக்சே துபாய் அல்லது சிங்கப்பூர் செல்ல உள்ள தாக இலங்கை செய்தி நிறு வனங்கள் தகவல் தெரி விக்கின்றன.