world

img

இலங்கையில் திரும்பப்பெறப்பட்ட அவசர நிலை பிரகடனம்

அவசர நிலை திரும்ப பெறப்படுவதாக இலங்கை அரசு இன்று அறிவித்துள்ளது.

வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியையும் அரசுக்கு எதிரான போராட்டத்தையும் இலங்கை எதிர்கொண்டு வரும் நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இதற்கு மத்தியில், கடந்த மே 6ஆம் தேதி நள்ளிரவு, அவசர நிலையை பிரகடனப்படுத்தி இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவிட்டார். பொருளாதார சரிவை சந்தித்துள்ள இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இதனை ஒடுக்கும் விதமாக, கடந்த ஒரு மாத காலத்தில் இரண்டு முறை அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

இச்சூழலில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவசர நிலை திரும்ப பெறப்படுவதாக இலங்கை அரசு செயலகம் செய்தி வெளியிட்டுள்ளது. அங்கு, சட்டம் ஒழுங்கின் நிலை மேம்பட்டதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

அவசர நிலையின்போது, யாரை வேண்டுனாலும் பிடித்து கைது செய்ய காவல்துறையினருக்கும் பாதுகாப்பு படையினருக்கும் அதிகாரம் வழங்கப்பட்டது. ஏற்கனவே, கொரோனா பெருந்தொற்றால் பெரும் பாதிப்புக்குள்ளான இலங்கையில் ராஜபக்சே அரசின் தவறான கொள்கையால் பொருளாதாரம் மேலும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டது.

இதன் காரணமாக, ஜனாதிபதி பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் நடத்தயது போது, அவரின் ஆதரவாளர்கள் போராட்டக்காரர்களை தாக்கியதை தொடர்ந்து  வன்முறை வெடித்தது, இந்த வன்முறையில் 9 பேர் கொல்லப்பட்டனர். மோதலில் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அந்நியச் செலாவணி கையிருப்பு பற்றாக்குறை காரணமாக வெளிநாட்டிலிருந்து உணவு பொருள்கள் மற்றும் எரிபொருளை  இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது.

 

;