world

img

இலங்கையில் இடதுசாரிகளுக்கு ஓர் அபூர்வமான வாய்ப்பு

இலங்கையில் மே 9 அன்று நடைபெற்ற வன்முறை தொடர்பான நிகழ்வுகள், அந்நாடு மிகவும் ஆழமான பொருளாதார நெருக்கடியால் சீர்கேடு அடைந்து கொண்டிருந்த நிலையில் அதற்கு ஒரு கூர்மையான நிவாரணத்தை அளித்திருக்கிறது. நாட்டின் பொருளாதார நெருக்கடி இப்போது அரசியல் அமைப்பு முறை மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் முழுமையாகக் கவ்விப்பிடித்துள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்குப் பிரதான காரணமாக ராஜபக்சே குடும்பத்தின் ஆட்சி அமைந்திருக்கிறது. ஜனாதிபதியான கோத்தபய ராஜபக்சே தன்னுடைய நிர்வாக அதிகாரத்தைப் பயன்படுத்தி, தள்ளாடிக்கொண்டிருக்கும் ஆட்சிக்குத் தீர்வு காண்பதற்கான ஒரு முயற்சியாக, தனது மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சேயை பிரதமர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்துள்ளனர். முன்னதாக, ஒட்டுமொத்த அமைச்சரவையும் ராஜினாமா செய்தது. புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார்.

ராஜபக்சே அரசின் பேரழிவு முடிவுகள்

ராஜபக்சே அரசு மேற்கொண்ட பேரழிவுதரத்தக்க முடிவுகள்தான் பொருளாதார நெருக்கடிக்கு முக்கியக் காரணமாகும். வரிகளை வெட்டியது,  வேளாண்மைக்கு தேவையான ரசாயன உரங்களை இறக்குமதி செய்வதற்குத்  தடை விதித்தது, வெற்று ஆரவாரத் திட்டங்களுக்கு அதிக அளவில் முதலீடு களைச் செய்தது.  எதேச்சதிகார ராஜபக்சே ஆட்சி மேற்கொண்ட இந்நட வடிக்கைகள் அனைத்தும் அரசின் வருவாயைக் குறைத்தது, வேளாண் உற்பத்தியைச் சீர்குலைத்தது, கடன் சுமை அதிகரிப்புக்கு இட்டுச் சென்றது. கோவிட் பெருந்தொற்றானது, பொருளாதார நெருக்கடியை மேலும் விரைவுபடுத்துவதற்கே இட்டுச் சென்றது. இதன் காரணமாக சுற்றுலா முற்றிலுமாக நின்று போனதால், அந்நியச் செலாவணி வருமானங்களில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இத்துடன் வெளிநாட்டில் வேலை பார்க்கும் இலங்கைத் தொழிலாளர்கள் பணம் அனுப்புவதும் நின்றுவிட்டது. 

மக்களின் கிளர்ச்சி

பொருளாதாரம் நிலைகுலைந்ததைத் தொடர்ந்து மக்கள் உணவு, எரிபொருள் மற்றும் மருந்துகள் கிடைக்காமல் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள். விலைவாசிகளும் பாய்ச்சல் வேகத்தில் உயர்ந்துள்ளன. இவ்வாறு தாங்கமுடியாத அளவிற்கு நிலைமைகள் சென்ற பின்னர் மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள். மார்ச் 31இலிருந்து  கிளர்ச்சியாளர்கள் மத்திய கொழும்பு, காலிமுகத்திடல் பூங்கா பகுதி, பிரதமரின்  இல்லத்திற்கு வெளியே என  அணிதிரண்டு, முகாமிட்டிருக்கிறார்கள்.  அமைதியான முறையில் நடந்து வந்த இந்தக் கிளர்ச்சிப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றிருக்கிறார்கள். இந்தப் போராட்டமானது, ஆசிரியர்கள், மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் என அனைத்துத்தரப்பினரின் ஆதரவையும் பெற்றிருக்கிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் பிரதான பங்கு

 இக்கிளர்ச்சி இயக்கத்தில் தொழிலாளர் வர்க்கம் முக்கியமான பங்களிப்பினைச் செய்திருக்கிறது. தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஏப்ரல் 28 அன்று பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுக்கப்பட்டது. இவ்வேலை நிறுத்தப் போராட்டத்தில் பல லட்சக்கணக்கானோர் பங்கேற்றார்கள். பின்னர் மீண்டும் மே 5 அன்று இரண்டாவது ஒரு நாள் பொது வேலை நிறுத்தம் மற்றும் முழு அடைப்பு போராட்டங்கள் நடைபெற்றன. இதிலும் டாக்டர்கள், செவிலியர்கள் மற்றும் இதர அலுவலர்கள் உட்பட ஏராளமானவர்கள் பெரிய அளவில் பங்கேற்றார்கள். இந்த வேலை நிறுத்தங்களின்போது ஜனாதிபதியும் அவருடைய அரசாங்கமும் ராஜினாமா செய்திட வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக முன்வைக்கப்பட்டன. 

வேலைநிறுத்தப் போராட்டங்கள் வீறுகொண்டு நடைபெற்றதைத் தொடர்ந்து பீதியடைந்த ஜனாதிபதி கோத்தபய, இரண்டாவது முறையாக ஒரு மாத கால அளவில், மீண்டும் அவசரநிலைப் பிரகடனம் செய்தார். ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. எனினும் போராடும் மக்கள் அதனை மீறினார்கள்.  உண்மையில் ஆட்சியாளர்கள் விழிபிதுங்கி நின்றனர். அவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மே 9 அன்று நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் என்பவை, அமைதியாக நடைபெற்று வந்த போராட்டத்தை சீர்குலைப்பதற்காக, ராஜபக்சே தரப்பில் மேற்கொள்ளப்பட்ட கடைசி முயற்சியாகும்.

ராஜபக்சே ஏவிய வன்முறை

மகிந்த ராஜபக்சே, போராடுவோரின் கோரிக்கையை ஏற்று ராஜினாமா  செய்வதற்குப் பதிலாக, தன் கட்சியின் (எஸ்எல்பிபி) ஆதரவாளர்களை தன் இல்லத்திற்கு அழைத்து, அவர்கள் மத்தியில் ஆத்திரமூட்டும் விதத்தில் பேசிய பின்னர், அவருடைய ஆதரவாளர்கள் வெளியே வந்து, அமைதியாகப் போராடிக் கொண்டிருந்தவர்கள் மீது தாக்குதல் தொடுத்திருக்கின்றனர்; அவர்களின் தற்காலிக பந்தல்களை நாசமாக்கினர். இதனைத்தொடர்ந்து காலிமுகப் பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த முகாம்கள் மீது தாக்குதல்கள் தொடுத்தனர். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்தார்கள். அங்கே நின்றிருந்த காவல்துறையினர், வன்முறையாளர்களை அடக்குவதற்குத் தவறிவிட்டனர்.

ஆளும் கட்சித் தரப்பு ஆதரவாளர்களால் மேற்கொள்ளப்பட்ட இத்தகைய  இழிவான வன்முறை நடவடிக்கைகள்தான் கொழும்புவுக்கு வெளியிலும் போராட்ட உணர்வைக் கொண்டு சென்று, இதற்கு பதிலடி கொடுக்கும் நிலையை உருவாக்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் பிரதமரின் இல்லமான டெம்பிள் ட்ரீஸ் முன்பு (Temple Trees) கூடி, அதனைத் தாக்க முற்பட்டார்கள். இறுதியாக, பிரதமர் பதவியை ஏற்கனவே ராஜினாமாசெய்துவிட்ட மகிந்த ராஜபக்சேயும் அவ ருடைய குடும்பத்தினரும்  ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு, பாதுகாப்பிற்காகக் கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டார்கள். இதன் பின்னர் ராஜபக்சே குடும்பத்தினரின் அனைத்து வீடுகளும், முன்னாள் அமைச்சர்கள் வீடு களும், ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடுகளும் குறிவைத்துத் தாக்கப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன.

கோத்தபய  வெளியேற வேண்டும்!

இதற்கிடையில், பிரதான எதிர்க் கட்சியாக விளங்கும்,சமகி ஜன பலவே கய கூட்டணி (SJB alliance), ஜனாதிபதி கோத்தபய தலைமையின்கீழ் அமை யும் எவ்விதமான அனைத்துக் கட்சி அல்லது இடைக்கால அரசாங்கத்தி லும் இணைய மாட்டோம் என அறி வித்தது. கோத்தபயவும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள். இடதுசாரிக் கட்சிக ளும், ஜனதா விமுக்தி பெரமுனா (ஜேவிபி) ஆகியவையும் புதிய தேர்தல் கள் நடைபெறும் வரையிலும் இடைக் கால ஜனாதிபதியும், இடைக்கால அர சாங்கமுமே வேண்டும் என்றும் விரும்புகின்றன. நாட்டில் அளவிடற்கரிய அதிகாரங்க ளைப் பெற்றிருக்கும் ஜனாதிபதி கோத்தபய, வெளியேற வேண்டும் என்று மக்கள் கோருவது நியாயமே. ஏனெ னில் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பொருளாதார நெருக்கடி மற்றும் குளறுபடிகளுக்குப் பிரதான காரணமே இவர்தான். இவரால் உருவாக்கப் பட்டதுதான் இப்போதிருந்துவரும்  எதேச்சதிகார தேசியப் பாதுகாப்பு அரசு. பொருளாதார நெருக்கடியும் அர சியல் நெருக்கடியும் பின்னிப் பிணைந்தவைகளாகும்.

கோத்தபய ராஜபக்சே தலை மையிலான ஆட்சி அகற்றப்படுவதுடன், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கட்டமைப்புகளில் ஜன நாயகப் பூர்வமான முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும். அனைத்து அதிகா ரங்களையும் கொண்ட ஜனாதிபதி ஆட்சி ஒழித்துக்கட்டப்பட வேண்டும். மத்தியத்துவப்படுத்தப்பட்ட தேசியப் பாதுகாப்பு அரசும் கலைக்கப்பட வேண்டும். நவீன தாராளமயப் பொருளா தாரக் கொள்கைகள் அகற்றப்பட்டு அதற்குப் பதிலாக மக்கள் ஆதரவு வளர்ச்சிப் பாதைக்கான கொள்கை ஏற் படுத்தப்படவேண்டும். ராஜபக்சே குடும்பத்தினரின் மீதான மாயை காணா மல் போயிருப்பதன் காரணமாக அது ‘சிங்கள - பௌத்தமத தேசியவாதம்’ மங்குவதற்கும் இட்டுச் செல்வதுடன், அதற்குப் பதிலாக மொழி மற்றும் மத சிறுபான்மையினர் மீது ஜனநாயகப் பூர்வமான அணுகுமுறையுடன் கூடிய அனைத்து மக்களின் ஒற்றுமைக்கான அடித்தளம் அமைக்கப்படும் என நம்புவோம்.

மாற்றுப் பாதையே தீர்வு

இலங்கை அரசாங்கம் கடன் பெறுவதற்காக சர்வதேச நிதியத்து டன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டி ருக்கிறது. இதற்கு சர்வதேச நிதியம் அளிக்கும் நிபந்தனைகள்  சமூக நலத் திட்டங்களில் வெட்டு, சிக்கன நடவ டிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் மற்றும் தனியார்மயத்தை மேலும் விரிவுபடுத்திட வேண்டும் என்பவைகளாகும். இப்போதுள்ள ஆட்சியாளர்கள் இவற்றுக்கு உட்படு வதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால், இலங்கையில் ஏற்பட்டுள்ள ஆழமான கட்டமைப்பு நெருக்கடிக்கு இது தீர்வாகாது.

இதற்கு எதிராக மக்களின் நலன்க ளைப் பாதுகாக்கும் விதத்திலும், நிதிமூலதனத்தின் இழிவுகளிலிருந்து இலங்கையைப் பாதுகாத்திடும் விதத்தி லும் ஒரு மாற்றுப்பாதை உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும். இலங்கையில் உள்ள இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு ஓர் அபூர்வமான வாய்ப்பு ஏற்பட்டிருக்கி றது.  அதனை அவர்கள் பயன்படுத்திக் கொண்டு இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்புமுறைகளில் மறுகட்டமைப்பை ஏற்படுத்திடவும், அத்தகைய மாற்றத்திற்கான போ ராட்டத்திற்கு மக்களை அணிதிரட்டிட வும் அவர்கள் நடவடிக்கைகள் எடுத்திட வேண்டும்.

மே 11, 2022, 
தமிழில்: ச.வீரமணி