world

img

உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டன் போட்டி: பி.வி.சிந்து தோல்வி  

உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தோல்வி அடைந்துள்ளார்.  

இந்தோனேசியாவின் பாலி நகரில் உலக டூர் இறுதிசுற்று பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் குரூப்-ஏ பிரிவில் இடம்பெற்ற இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பி.வி.சிந்து அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதிப் போட்டியில் ஜப்பான் வீராங்கனை அகானே யமகுச்சியை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.  இந்நிலையில் இறுதிப் போட்டியில் பி.வி.சிந்து தென்கொரிய வீராங்கனை ஆன் சியோங் பலப்பரீட்சை நடத்தினர். நடப்பு உலக சாம்பியனான சிந்து, உலகின் ஆறாவது இடத்தில் உள்ள தென்கொரிய வீராங்கனையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் தோல்வி அடைந்தார்.

மொத்தம் 39 நிமிடங்கள் நடந்த இந்த போட்டியில் தென் கொரிய வீராங்கனை ஆன் சியங், 21-16, 21-12 என்ற செட் கணக்கில் சிந்துவை எளிதில் வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

;