world

img

இந்தோனேஷியா நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 162 ஆக உயர்வு

இந்தோனேஷியாவில் நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளனர். இச்சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

இந்தோனேஷியாவின் ஜாவா தீவுப்பகுதியில் உள்ள சியான்ஜுர் நகரில் இந்திய நேரப்படி, நேற்று காலை 11.51 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோலில் 5.6 அலகாக பதிவாகியிருந்தது.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் இடிபாடுகளில் சிக்கி இருக்கக்கூடும் என எதிர்பாக்கப்படுகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் அஞ்சப்படுகிறது. நில நடுக்கத்தால் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்துள்ளது. இதனால் சுமார் 13,000 பேர் வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.