world

img

தீக்கதிர் உலக செய்திகள்

டிரம்ப் பதவி ஏற்றவுடன்  போர் முடியும் : ஜெலன்ஸ்கி 

டொனால்ட் டிரம்ப் 2014 ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற வுடன், தனது நாட்டிற்கு எதிரான ரஷ்யாவின் போர் “விரைவில் முடிவடையும்” என்று உக்ரைன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கி தெரி வித்துள்ளார். தேர் தல் பிரச்சாரத்தின் போது நான் வென் றால் ரஷ்யா-உக்ரைன் போரை உடனடியாக நிறுத்துவேன் என டிரம்ப் வாக்கு றுதி கொடுத்து வந்தார். இந்த வாக்குறுதியை மேற்கோள் காட்டிய ஜெலன்ஸ்கி,  இந்த போர் விரைவில்  முடியும் என உக்ரைன் ஊடகத்திற்கு கொடுத்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

கியூபாவிற்கு 80 ஆயிரம் டன்  எரிபொருள் அனுப்பும் ரஷ்யா   

கியூபாவிற்கு  80 ஆயிரம் டன்கள் அளவிற்கு டீசல்  உள்ளிட்ட எரிபொருட்களை அனுப்ப ரஷ்யா முடி வெடுத்துள்ளது. கியூபாவில்  நடைபெற்ற இருதரப்பு சந்திப்பின் போது இந்த முடிவை ரஷ்ய பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.ஜனாதிபதி புடினால் இந்த முடிவு நேரடி யாக அங்கீகரிக்கப் பட்டுள்ளது என  அவர்கள் குறிப்பிட் டுள்ளனர். அமெரிக்க  பொரு ளாதார தடைகளால் முடக்கப்பட்டுள்ள கியூபாவின் எரி சக்தி துறையை சரி செய்ய இந்த முடிவு உதவி கரமாக இருக்கும் என கியூப அதிகாரிகள் தெரி வித்துள்ளனர்.  

மெட்டா நிறுவனத்திற்கு அபராதம் :  ஐரோப்பிய ஆணையம் உத்தரவு 

மெட்டா நிறுவனம் நிறுவனம் முறையற்ற வணி கத்தில் ஈடுபட்டதால்  ரூ.7 ஆயிரம் கோடி  அபராதம் விதித்து ஐரோப்பிய ஆணையம் உத்தர விட்டுள்ளது. இந்நிறுவனம், மார்க்கெட்பிளேஸ் எனும் விளம்பர சேவையில் ஈடுபட்டு வருகிறது. இந்த சேவையை ஃபேஸ் புக்கில் புகுத்தி பய னர்கள் விரும்பாவிட் டாலும் விளம்ப ரத்தை கட்டாயம் பா ர்க்கும்  வகையில் நடைமுறைப்படுத்தியுள்ளது. இவ்வாறான தவறான நடைமுறை மூலம் போட்டியாளர்களை மெட்டா நிறு வனம் ஒடுக்குகிறது என அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.  

ஜெர்மனி அதிபர்  ரஷ்ய ஜனாதிபதியுடன் பேச்சு

ரஷ்ய ஜனாதிபதி புடின் உடன் ஜெர்மன் அதிபர் சோல்ஸ் தொலைபேசி உரையாடல் நடத்தி யுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் இதுவே இவர் களின் முதல் உரையாடல் ஆகும். இந்த பேச்சு வார்த்தையில்  உக் ரைன் உடனான போர் குறித்து உரை யாடியதாக தெரி விக்கப் பட்டுள்ளது. ரஷ்யா எப்போதும் போர் பேச்சுவார்த் தைக்கான சாத்தியக் கூறுகளை நிறுத்திக் கொள்ளவில்லை என்றும் பேச்சுவார்த்தைகளுக்கான நிபந்தனைகளை நாங்கள் ஏற்கனவே தெரிவித்துள்ளோம் எனவும் ரஷ்ய தரப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லெபனான் தலைநகரில் தொடர்ந்து குண்டு வீசும் இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் கொடூர மான முறையில் வான்வழித்தாக்குதலை நடத்திய பிறகு பெய்ரூட்டின் தெற்கு புறநகர் பகுதி களில் உள்ள லெபனான் மக்களை வெளியேற சொல்லி மிரட்டியுள்ளது. பின் அங்கும் இஸ்ரேல் ராணுவம் வான்வழித் தாக்கு தல்களை நடத்தியுள் ளது. இஸ்ரேல் தாக்குதலால் லெப னானில் இதுவரை 3,445 மக்கள் படுகொலையாகி யுள்ளனர். மேலும் 14,599 பேர் படுகாய மடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார துறை தெரிவித்துள்ளது.