world

img

ஏமன்: கண்ணிவெடிகளுக்கு மத்தியில் குழந்தைகள்

சனா, பிப்.8- ஏமன் நாட்டின் வடக்குப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் கண்ணிவெடிகள் வைக்கப்பட்டுள்ள தால் அங்கு வசித்து வரும் குழந்தைகள் பெரும் அபாயத்தின் மத்தியில் உள்ளனர். ஏமன் நாட்டின் மீது சவூதி அரேபியாவும், அதன் கூட்டாளிகளும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறார்கள். ஏமனும் பதில் தாக்குதல்களை தொடுக்கிறது. இருதரப்பிலும் அப்பாவி மக்கள் கொல்லப்படுவது அதிகரித்துள்ளது. இந்நிலை யில் அந்நியப் படைகள் உள்ளே நுழைந்து விடாமல் பார்த்துக் கொள்ள ஏமனின் பல வடக்குப் பகுதிகளில் கண்ணிவெடிகள் புதைத்து வைக்கப்பட்டுள்ளன. இந்தக் கண்ணி வெடிக ளுக்கு அப்பாவி மக்கள் பலியாகி வருகிறார்கள். ஐ.நா.சபையின் யுனிசெப் அமைப்பின் புள்ளி விபரங்களின்படி, சுமார் 10 ஆயிரம் குழந்தைகள் கண்ணிவெடிகளுக்குப் பலியாகியுள்ளன அல்லது காயம் அடைந்துள்ளன. கடந்த டிசம்பர் மாதத்தில் ஹஜ்ஜா மாகாணத்தில் சில சிறுவர்கள் ஆடு மேய்ப்பதற்காகச் சென்றிருக்கிறார்கள். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி ஒரு கண்ணி வெடி வெடித்ததால் ராய்டு கெர்பி என்ற சிறு வனின் வலதுகால் துண்டிக்கப்பட்டது.

சில மீட்டர் தூரம் தள்ளி இருந்ததால் மற்ற சிறுவர்கள் தப்பிப் பிழைத்தனர். இந்த கண்ணிவெடிகள் தற்போது ஆட்சி யில் உள்ளவர்களுக்கு எதிராக முந்தைய அர சுப்படைகள் போரிட்டபோது புதைக்கப்பட்ட கண்ணிவெடிகளாகும். அதில் சொந்த நாட்டு  சிறுவர்கள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்து வரு கிறார்கள். ஏமன் ராணுவம் கண்ணிவெடி வைக்கப் பட்டுள்ள இடங்களை வேலிகள் இட்டு தனி மைப்படுத்தி வருகிறது. மக்கள் நெருக்கமாக வாழும் பகுதிகளை கண்ணிவெடிகள் இல்லாத பகுதிகளாக மாற்றும் பணியை அவர்கள் செய்கிறார்கள். போர் நிறுத்தமே இதுபோன்ற அப்பாவிகளின் உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்று ஏமன் ராணுவம் கூறுகிறது. இது பற்றி மேலும் கூறிய ராணுவத்தின் கண்ணிவெடிகள் அகற்றும் துறை யைச் சேர்ந்த சய்யப் அல் வாசெய், “2021 ஆம் ஆண்டில் மட்டும் நாங்கள் 5 ஆயிரம் கண்ணிவெடி களை அகற்றியுள்ளோம். மேலும் கண்ணிவெடி கள் இருக்கும் பகுதிகளை எங்கள் கட்டுப்பாட்டுக் குள் கொண்டு வந்திருக்கிறோம்” என்று தெரி வித்துள்ளார்.