world

img

காஷ்மீர் குறித்து பேச வேண்டும்

இஸ்லாமாபாத்,ஏப்.12- காஷ்மீர் விவகாரத்தில் உரிய தீர்வு காணப்படாமல் இந்தியாவுடன் சுமூக உறவை பேணுவது என்பது சாத்திய மற்றது என்று அந்நாட்டின் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப்  தெரிவித்துள்ளார். நம்பிக்கையில்லா தீர்மா னத்தில் தோல்வியடைந்து இம் ரான் கான்  தலைமையிலான ஆட்சி  பறிபோனது. இதனை யடுத்து பாகிஸ்தானின் 23-வது பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பெரும்பான்மை யான உறுப்பினர்களின் ஆதர வுடன் தேர்வு செய்யப்பட்டு, பதவியேற்றார். பாகிஸ் தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஸ் ஷெரீப்பிற்கு இந்திய  பிரதமர் மோடி வாழ்த்து தெரி வித்துள்ளார். இந்நிலையில்  இஸ்லாமா பாத்தில் புதிய பிரதமர் ஷபாஸ் ஷெரீப்  செய்தியா ளர்களிடம் கூறியதாவது:

முன்னாள் பிரதமர் இம்ரான் கான், காஷ்மீர் விவ காரத்தில் மிகவும் மெத்தன மானப் போக்கை கடைப் பிடித்து வந்தார். குறிப்பாக, காஷ்மீருக்கு சிறப்பு அந்த ஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை இந்தியா கடந்த  2019-இல் நீக்கிய போதும் இம்ரான் கான் பெரிதாக எதிர்வினை ஆற்றவில்லை. ஆனால், காஷ்மீர் பிரச்சனை யில் எனது அணுகுமுறை வேறு மாதிரியாக இருக்கும். காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணாமல், இந்தியாவுடன் நீடித்த சுமூக மான உறவை பாகிஸ்தானால் நிச்சயம் பேண முடியாது. இதனை பிரதமர் நரேந்திர மோடி புரிந்துகொண்டு, காஷ்மீர் விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். அப்போது தான், இரு  நாடுகளிலும் நிலவி வரும் வறுமை, வேலைவாய்ப்பி ன்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளுக்கு நம்மால் தீர்வு காண முடியும்.  இவ்வாறு அவர் கூறி னார்.