நேபிடா, ஜூன் 2- மியான்மரில் ராணுவ ஆட்சி ஏற்பட்ட பிறகு உருவான வன்முறையால் தங்கள் பகுதியிலிருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைத் தொட்டிருக்கிறது. மியான்மரில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியைக் கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றி ஓராண்டு மேலாகி விட்டது. உள்நாட்டுக்குள்ளேயே இடம் பெயர்ந்த மக்களின் எண்ணிக்கை முதன்முறையாக 10 லட்சத்தைத் தொட்டு விட்டது என்று ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. இதில் கலகம் நடத்தி ராணுவம் கைப்பற்றிய பிறகு, வெளியேறியவர்கள் 7 லட்சம் பேர் என்றும், அதற்கு முன்பாக ரோஹிங்யா இஸ்லாமியர்கள் உள்ளிட்டோர் 3 லட்சம் பேரும் வெளியேறினார்கள் என்றும் ஐ.நா. புள்ளிவிபரம் தெரிவிக்கிறது. ஏராளமான குடியிருப்புகள் மற்றும் கட்டிடங்களை ராணுவம் இதுவரையில் தகர்த்துள்ளது.