world

img

மதச்சார்பற்ற இந்தியா, இந்து தேசியவாத நாடாக மாறிக் கொண்டிருப்பது மிகப்பெரிய ஆபத்து!

வாஷிங்டன், டிச.17- மதச்சார்பற்ற நாடான இந்தியா, இந்து தேசிய வாத அரசாக மாறும் அபாயத்தில் உள்ளதாக அமெரிக்க எம்.பி. ஆன்டி லெவின் கூறியுள்ளார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவை எனப்படும் கீழவையில், ஜனநாயகக் கட்சியின் எம்.பி.யாக இருப்பவர் ஆன்டி லெவின் (62). இவரது பதவிக்காலம் முடிவடைவதை ஒட்டி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் தனது கடைசி உரையை  நிகழ்த்தியுள்ளார். அப்போது அவர் கூறியிருப்பதாவது: “நான் எம்.பி.யாக பதவி வகித்த காலத்தில் உலகின் பல நாடுகளில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்துப் பேசியிருக்கிறேன். உலகின் எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் மனித உரிமை மீறல்களை அமெரிக்க நாடாளுமன் றத்தில் எழுப்பினால், அது உலகின் கவனத்தை பெறும். அதன் மூலம் அந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும் என்பதே எனது நம்பிக்கை.  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் உள்ள மக்களின் மனித உரிமைகளுக்காக நான் குரல் கொடுத்திருக்கிறேன். இந்தியாவைப் பொறுத்த வரை, தற்போது அந்நாடு மிகப்பெரிய ஆபத்தில் உள்ளதாக தெரிகிறது.

அதாவது, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக அறியப்படும் இந்தியா இப்போது கொஞ்சம் கொஞ்சமாக இந்து தேசியவாத அரசாக மாறும் அபாயத்தில் உள்ளது. ‘மதச்சார்பற்ற ஜனநாயகம்’ என புக ழப்பட்ட ஒரு நாடு, ‘இந்து தேசியவாத’ அரசாக மாறுவது மிகவும் ஆபத்தானது.  ஒருவர் இந்துவாக, முஸ்லிமாக, கிறிஸ்த வராக சிறுபான்மையினராக இருக்கிறார் என்ப தல்ல பிரச்சனை. யாராக இருந்தாலும் அவர்க ளின் உரிமை காக்கப்பட வேண்டும். நான் இந்து, சமணம், பவுத்தம் உட்பட இந்தியாவில் உள்ள மதங்களை நேசிக்கிறேன். அதனால்தான், இந்தியாவில் உள்ள அனைத்துத் தரப்பு மக்க ளின் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என நான் விரும்புகிறேன்.  இவ்வாறு ஆன்டி லெவின் பேசியுள்ளார்.  இந்தியாவின் மதவாத அபாயம் குறித்து ஆன்டி லெவின் தொடர்ந்து பேசி வருகிறார்.  கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத் தில் பேசும்போது, “காஷ்மீரில் பல கொடுமை கள் நடைபெறுகின்றன. அங்குள்ள மக்கள் வதைக்கப்படுகின்றனர். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்த நாட்டை எந்த திசையில் கொண்டு செல்கிறார் என்பதற்கு இதுவே சிறந்த உதாரணம்” என்று கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, தனது கடைசி உரையிலும் இந்தியா வைச் சூழ்ந்துள்ள மதவாத அபாயத்தை குறிப்பிட்டு எச்சரிக்கை செய்துள்ளார்.