world

img

புதிய பிரதமர்

பெய்ரூட், ஜூன் 24-  லெபனானின் புதிய பிரதமராக தற்போதைய இடைக்கால பிரதமர் நஜிப் மிகாடி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். நான்காவது முறையாகத் தேர்வு செய்யப் பட்டுள்ள நஜிப் மிகாடியை புதிய அரசு அமைக்குமாறு ஜனாதிபதி மிச்சேல் ஆன் கேட்டுக் கொண்டிருக்கிறார். லெபனான் நாடாளுமன்றத்தில் 128 உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 54 பேர் நஜிப் மிகாடிக்கு ஆதரவு தெரிவித்தனர். பொறுப்பேற்றவுடன், நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் தங்களுக்கிடையிலான வேறுபாடுகளைப் புறந்தள்ளி விட்டு ஒன்றுபட்டுப் பணியாற்ற வேண்டும் என்று மிகாடி கேட்டுக் கொண்டிருக்கி றார். ஹெஸ்புல்லா அமைப்பே இவரை பிரதமர் பொறுப்பிற்கு முன்மொ ழிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

;