world

காங்கிரஸ் தோல்வி: காரணம் என்ன?

4 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை ஞாயிறன்று நடைபெற்ற நிலையில், தெலுங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கிறது. சத்தீஸ்கர், ராஜஸ்தான் மாநிலங்களில் ஆட்சியை பறிகொடுத்தும், மத்தியப்பிரதேசத்தில் படுதோல்வியையும் சந்தித்துள்ளது காங்கிரஸ் கட்சி.

இந்நிலையில், தேர்தல் ஆணைய வாக்கு சதவிகித புள்ளி விபரங்ககளின் அடிப்படையில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தி யப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளை புறக்கணித்ததால் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது.

ராஜஸ்தான்

ராஜஸ்தானில் ஆட்சியை கைப்  பற்றிய பாஜக 41.92 சதவீத வாக்கும்,  ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ்  39.06 சதவீத வாக்குகளும் பெற்றுள்  ளன. ஆம் ஆத்மி 0.34 சதவீதமும், ஏஐஎம்ஐஎம் 0.01 சதவீதமும், பிஎஸ்பி 2.11 சதவீதமும், இடது சாரிகள் 1.05 சதவீதமும்,  ஆர்எல்டிபி 2.2 சதவீத வாக்கு கள் பெற்றுள்ளன. ஏஐஎம்ஐஎம், பிஎஸ்பி கட்சிகள் “இந்தியா” கூட்ட ணியில் இல்லை என்ற நிலையில், காங்கிரஸ் மற்றும் “இந்தியா” கூட்டணி கட்சிகளுடன் மொத்த வாக்கு சதவீதம் 42 சதவீதத்தை நெருங்கியுள்ளது. “இந்தியா” கூட் டணி கட்சிகளுடன் இணக்கமாக தொகுதி பங்கீட்டில் ஈடுபட்டு இருந்தால் ராஜஸ்தானில் காங்கி ரஸ் கட்சி ஆட்சியை தக்க வைத்து  இருக்கும். தனித்து களமிறங்கிய தால் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.

மத்தியப்பிரதேசம்

மத்தியப்பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ள பாஜக 48.67 சதவீத வாக்குகள் பெற்றுள்ளன. காங்கிரஸ் 40.29 சத வீதமும், ஆம்ஆத்மி 0.40 சதவீத மும், ஏஐஎம்ஐஎம் 0.22 சதவீதமும்,  பிஎஸ்பி 3.15 சதவீதமும், இடது சாரிகள் 0.4 சதவீதமும், ஐக்கிய ஜனதா தளம் 0.02 சதவீதமும், சமாஜ்  வாதி 0.4 சதவீதமும் வாக்குகள்  பெற்றுள்ளன. மத்தியப்பிரதேசத் தில்  “இந்தியா” கூட்டணி கட்சி களின் மொத்த வாக்குகள் 44 சத வீதத்தை நெருங்கியுள்ள நிலை யில், “இந்தியா” கூட்டணி கட்சிகளு டன் களமிறங்கியிருந்தால் பாஜக வின் சதவீதம் குறைந்து காங்கிரஸ்  பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை கைப்பற்றி இருக்கும்.

சத்தீஸ்கர்
சத்தீஸ்கரில் ஆட்சியை கைப்  பற்றியுள்ள பாஜக 45.80 சதவீத வாக்குகள் பெற்றுள்ளன. ஆட்சி யை பறிகொடுத்த காங்கிரஸ் 41.89  சதவீதமும், ஆம் ஆத்மி 1.00 சதவீத மும், பிஎஸ்பி 2.52 சதவீதமும், இடது சாரிகள் 0.47 சதவீதமும், சமாஜ் வாதி 0.04 சதவீத வாக்குகள் பெற்  றுள்ளன. எதிர்க்கட்சிகளின் மொத்த  வாக்கு சதவீத 45 சதவீதத்தை தாண்டியுள்ள நிலையில், பிஸ்பி  தவிர்த்து காங்கிரஸ் மற்றும் “இந் தியா” கூட்டணி எதிர்க்கட்சிகளின் வாக்கு சதவீதத்தை கணக்கீட்டால் பாஜகவின் வாக்கு சதவீதத்திற்கு இணையாக அதிக இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் ஆட்சியை தக்க வைத்து இருக்கும். 

மேற்கண்ட விபரங்களின்படி பார்த்தால் “இந்தியா” கூட்டணி யில் அங்கம் வகிக்கும் கட்சிகளு டன் இணைந்து காங்கிரஸ் கள மிறங்கி இருந்தால் ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர் மாநி லங்களில் பாஜகவின் வாக்கு சத வீதத்தை குறைத்து காங்கிரஸ் கட்சி  ஆட்சியில் அமர்ந்து இருக்கும். “இந்தியா” கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைத்து செல்லாததால் மூன்று மாநிலங்களிலும் தோல்வி யை சந்திக்க நேரிட்டது. இதே நிலை  மக்களவைத் தேர்தலில் நீடித்தால் பாஜகவை தோற்கடிக்க முடியாத நிலையே ஏற்படும் என அரசியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

டிச.6- ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் கூட்டம்

தெலுங்கானா, மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் 4 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவாகிய வாக்குகள் ஞாயி றன்று எண்ணப்பட்ட நிலையில், தெலுங்கானாவில் காங்கி ரஸ் கட்சியும், மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜகவும்  ஆட்சியமைக்க உள்ளன. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தேசிய  தலைவர் மல்லிகார்ஜுன கார்கே “இந்தியா” கூட்டணியின் அடுத்த  ஆலோசனைக் கூட்டம் டிசம்பர் 6 அன்று (புதன்கிழமை) தில்லியில்  நடைபெறவிருப்பதாகவும், கூட்டணி கட்சிகள் கலந்து கொள்ளு மாறும் அழைப்பு விடுத்துள்ளார். “இந்தியா” கூட்டணிக் கட்சிகளை  காங்கிரஸ் கண்டுகொள்ளாததால்தான் மத்தியப்பிர தேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் பாஜக வெற்றி பெற்றதாக பல்வேறு  விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில்,  டிசம்பர் 6 அன்று நடை பெறும் “இந்தியா” கூட்டணிக் கட்சிகள் கூட்டம் முக்கியம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.