2019 -ல் மைத்திரிபால சிறிசேனாவை அடுத்து இலங்கையின் ஜனாதிபதி ஆனவர் கோத்தபய ராஜபக்சே. ராணுவ பின்னணியுடன் உள்ள முதல் ஜனாதிபதி இவரே. 26 ஆண்டுகள் இலங்கையின் ராணுவ அதிகாரியாக பணியாற்றியுள்ளார். 2005 முதல் 2009 வரை தமிழீழ விடுதலைப் புலிகளுடன் யுத்தம் நடந்த காலத்தில் கோத்தபய ராணுவ செயலாளராக இருந்தார். அப்போது ஜனாதிபதியாக இருந்தவர் கோத்தபாய ராஜபக்சவின் மூத்த சகோதரர் மகிந்தா ராஜபக்சே. 2009-க்கு பிந்தைய இலங்கை அரசில் ராஜபக்சே குடும்பத்தினர் மேலாதிக்கம் இருந்து வருகிறது. ஏழு கேபினட் மந்திரி உள்பட 40 அமைச்சர்கள், ராஜபக்சே குடும்பத்தினர். 2019 தேர்தலின்போது பொருளாதார மீட்பு மற்றும் மக்களுக்கு பாதுகாப்பு என கோத்தபய வாக்குறுதி அளித்தார். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் பொருளாதார துறையில் இலங்கை படுதோல்வி அடைந்துள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டம் என்பதன் பெயரால் முஸ்லிம்களும் அரசை எதிர்த்துப் பேசுபவர்களும் குறி வைத்து தாக்கப்பட்டனர்.
இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஆளுநர்களாக நியமிக்கப்படுவதன் மூலம் பிராந்திய கவுன்சில்களின் சுயாட்சி கேள்விக்குறியாக்கப்படுகிறது. தலைநகரம் கொழும்புவை அழகுபடுத்துவதன் பெயரால் சேரிவாழ் மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். 2021 ஏப்ரல் 22-ல் ரசாயன உரங்கள் பயன்படுத்துவது ,இறக்குமதி செய்வது முழுமையும் தடை செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே 100 சதவிகித இயற்கை உரங்கள் மூலம் உணவு உற்பத்தி செய்யும் நாடாக இலங்கையை மாற்றும் முயற்சியில் இறங்கினர் .அடிப்படையிலேயே விவசாய இறக்குமதி சார்ந்த பொருளாதாரமாக இருப்பதால் திடுதிப்பென இயற்கை உரத்திற்கு மாறியது, இலங்கை விவசாயிகளுக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்தது .தற்போது நாடு முழுவதும் உணவு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு டீசல் ,பால் பவுடர் மற்றும் மருந்துகள் சந்தையில் இருப்பு இல்லை என்ற நிலை ஏப்ரல் 9- 11 இல் மூன்று பேர் க்யூவில் நிற்கும்போது மரணமடைந்துள்ளனர். கோத்தபய ராஜபக்சே அலுவலகம் முன் கோத்தா கோ என்ற கிராமம் டெண்டுகள் போட்டு கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்யுமாறு ஆயிரக்கணக்கான மக்கள் போராடி வருகின்றனர் .இத்தகைய சிவில் சமூக நிர்ப்பந்தம் மற்றும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளதால் இலங்கை அரசு ஏப்ரல் 18- 22-ல் உதவி கோரி ஐஎம்எப் உடன் பேசியது. நெருக்கடிக்கு தீர்வு காண ஐஎம்எப் உதவுவதாக அறிவித்துள்ளது. ஐஎம்எப் கடன் வாங்கி எந்த நாடும் உருப்பட்டதாக வரலாறு இல்லை. மாற்றுப் பொருளாதார கொள்கைகளுக்காக சோசலிசத்திற்காக இலங்கையில் மக்கள் மொழி, மத மாச்சரியம் இன்றி ஒன்றிணைந்து போராட்டத்தை தீவிரமாக்கிட வேண்டிய தருணம் இது.