world

img

ஸ்பெயின் - ரெப்சால் தொழிலாளர்கள் கிளர்ச்சி

மாட்ரிட், ஜூலை 18- ரெப்சால் நிறுவனத்தின் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தைத் துவங்கியுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் இருந்து எந்த வித அதிகரிப்பும் இல்லாமல் சம்பளம் அப்படியே இருக்கிறது என்பதை  சுட்டிக்காட்டி, ரெப்சால் தொழிலாளர் கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். ஸ்பெயினில் உள்ள சுமார் ஆயிரம் மையங்களில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது. பண வீக்கம் அதிகரித்துள்ள நிலையில், ஊதியத்தில் முன்னேற்றம் இல்லாத நிலையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று தொழிற்சங்கங்கள் கூறி யுள்ளன. வேலை நிறுத்தத்தின் முதல் நாளில் 95 விழுக்காடு தொழிலாளர் கள் அதில் பங்கேற்றுள்ளனர். ஊதிய உயர்வு குறித்த உடன்பாட்டை எட்டுவதில் ரெப்சால் நிறுவனம் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலை யில் ரெப்சால் தொழிலாளர்கள் தங்கள் வாங்கும் சக்தியை இழந் துள்ளனர் என்று தொழிற்சங்கங்கள் வெளியிட்ட அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. தாங்கள் ஈட்டிய லாபத்தைத் தொழிலாளர்களுடன் பகிர்ந்து கொள்ள நிறுவனம் தயா ராக இருக்க வேண்டும். இல்லை யென்றால், வேலை நிறுத்தத்தை எதிர் கொள்ள வேண்டி வரும் என்று சங் கங்கள் ஏற்கனவே எச்சரித்திருந்தன. நடப்பாண்டின் முதல் பாதியில் நிறு வனம் நல்ல லாபத்தை சந்தித்துள்ள நிலையில், தொழிலாளர்களின் ஊதி யத்தை உயர்த்தாமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் இருக்க முடியாது என்று சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன.