world

img

சீனாவின் சாதனை தொடர்கிறது

பெய்ஜிங், ஏப்.19- தனது சென்சோ-13 விண்வெளி ஆய்வுப் பயணத்திட்டம் வெற்றி பெற்ற தாக மக்கள் சீனம் அறிவித்துள்ளது. மூன்று விண்வெளி ஆய்வா ளர்களுடன் விண்ணில் ஏவப்பட்ட சென்சோ-13, மீண்டும் பூமிக்கு மிக வும் பாதுகாப்பாக வந்திறங்கியுள் ளது. ஆறு மாத காலம் விண்ணில்  பயணித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட இந்தக்குழுவில் சாய் ஜிகாங், வாங் யாபிங் மற்றும் யி குவாங்பு ஆகியோர் இடம் பிடித்தி ருந்தனர். சீனாவின் டாங்பெங் இறங்கு தளத்தில் வந்து விண்கலம் இறங்கியபோது, மருத்துவக்குழு இவர்களுக்காகக் காத்திருந்தது. உடனடியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. மூவரும் நல்ல உடல் நலனோடு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதன்பிறகு, சென்சோ-13 விண் வெளி ஆய்வுப் பணிகள் வெற்றி கரமாக மேற்கொள்ளப்பட்டதாக மக்கள் சீனம் அறிவித்தது. இந்தக் குழுவின் தலைவரான சாய் ஜிகாங் முதலில் விண்கலத்தில் இருந்து வெளியில் வந்தார்.

மருத்துவ சோத னைகளுக்குப் பிறகு செய்தியா ளர்களிடம் பேசிய அவர், ஆய்வுப் பயணம் மிகவும் நல்ல முறையில் நடந்தது என்று குறிப்பிட்டார். அவருக்குப் பிறகு, வாங் யாபிங் வெளியில் வந்தார். விண்ணில் அமைக்கப்பட்டுள்ள சீன விண் வெளி ஆய்வு மையத்திற்கு சென்ற  முதல் பெண் இவர் என்பது குறிப்பி டத்தக்கது. மூவரும் விண்ணில் நடக்கும் பயிற்சியையும் செய்தார்கள். விண்ணில் நடந்த முதல் பெண் விண்வெளி ஆய்வாளராகவும் வாங் யாபிங் உருவெடுத்துள்ளார். தனது சகாக்களுடன் இணைந்து நவம்பர் 7, 2021 அன்று விண்வெ ளியில் நடந்தார். விண்ணில் அமைக் கப்பட்டுள்ள விண்வெளி நிலையத் தின் கட்டுமானப் பணிகள் பற்றியும் இவர்கள் ஆய்வுகளை நடத்தியிருக் கிறார்கள். முக்கியமான தொழில் நுட்பங்களை சரிபார்க்கும் வேலை யும் நடந்துள்ளது. அடுத்தபடியாக, இரண்டு விண் வெளிப் பயணங்களுக்கு சீனா திட்டமிட்டிருக்கிறது. முதலில் டியான் சோ-4 விண்ணில் செலுத்தப்படும், அதைத் தொடர்ந்து விண்வெளி ஆய்வாளர்களுடன் சென்சோ-14 மேலே செல்லும். சென்சோ-14ன் ஆய்வுகளுக்குத் தேவையான பொருட்களைத் தரும் வேலையை டியான்சோ-4 செய்யும். சர்வதேச விண்வெளி நிலையத்தில் இடம் மறுக்கப்பட்டதால், சொந்தமாகவே தனி விண்வெளி நிலையத்தை அமைத்து வரும் சீனா, அதில் பெரும் முன்னேற்றத்தைக் கண்டி ருப்பதை இந்த நிகழ்வுகள் காட்டு கின்றன என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.