world

img

அசாஞ்சேவை விடுதலை செய்!

டிசம்பர் 10 மனித உரிமை தினத்தன்று பத்திரிகையாளர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்கா விற்கு நாடு கடத்த இங்கிலாந்து நீதி மன்றம் அனுமதி வழங்கி தீர்ப்பு வழங் கியது. இவர் நாடு கடத்தப்பட்டால் அமெரிக்காவின் கேடுகெட்ட உளவு பார்க்கும் சட்டத்தின் கீழ் பல்வேறு கிரிமினல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வாழ்நாள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவார். ஜூலியன்  அசாஞ்சே ஆஸ்திரேலியாவை சேர்ந்த பத்திரிகையாளர். இராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக் காவின் யுத்த குற்றங்கள் மற்றும் அட்டூ ழியங்கள் குறித்த தகவல்களை அமெ ரிக்க ராணுவத்தை சேர்ந்த செல்பி மேனிங் என்பவர் அசாஞ்சேவின் விக்கி லீக்ஸ் என்ற ஊடக அமைப்பிற்கு அனுப்பி வைத்தார். இரண்டு பத்திரி கையாளர் உள்பட இராக்கிய சிவிலி யன்களை அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்ற சம்பவ வீடியோவும் செல்சி மேனிங் மூலம் அவருக்கு கிடைத்தது.

உலகம் முழுவதும் பல அரசுகள் நிகழ்த்திய மனித உரிமை மீறல்களை, லஞ்ச ஊழலை விக்கிலீக்ஸ் அம்ப லப்படுத்தியது. இத்தகைய தக வல்களை உலகில் பல ஊடக அமைப்பு களும் வெளியிட்டன. நியூயார்க் டைம்ஸ், கார்டியன், பீப்பிள்ஸ் டெஸ்பாட்ச் போன்ற இதழ்களிலும் வெளியானது. பத்திரிகைத் துறையில் ஜூலியன் அசாஞ்சே புரிந்த இந்த அம்பலப்படுத்தலுக்காக 10 ஆண்டுக்கு மேல் தண்டனை அனுப விக்கும் கொடுமை நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவின் உளவு சட்டத்தின் கீழ் முதல் முறையாக அசாஞ்சே மீது தான் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள் ளது.

அமெரிக்க அரசும் அதன் கூட்டணி நாடுகளும் அசாஞ்சே ஒரு பத்திரிகை யாளர் என்ற உண்மையை ஏற்க  மறுக்கின்றன. ஜூலியன் அசாஞ்சே தண்டிக்கப்படுவது பத்திரிகை சுதந்திரம் கருத்துச் சுதந்திரத்தின் மீது விடுக்கப்பட்ட அடிப்படை தாக்குதலா கும். ஜூலியன் அசாஞ்சே மற்றும் விக்கிலீக்ஸ் வேட்டையாடப்படுவது பத்திரிகை சுதந்திரத்தை கேலிக் கூத்தாக்குகிறது. ஜனநாயகம் பற்றி யும், பத்திரிகை சுதந்திரம் குறித்தும் வாய்கிழிய பேசும் அமெரிக்க அரசு  உலகம் முழுவதும் பல ஜனநாயக படு கொலைகளை நிகழ்த்தி வருகிறது.

ஜூலியன் அசாஞ்சே அம்பலப்படுத் திய அமெரிக்க ராணுவ குற்றவாளி களை தண்டிப்பதற்கு பதிலாக அவர் மீது மனித உரிமையை மீறும் விதத் தில், ஐ.நா. சாசனத்திற்கு விரோதமாக அமெரிக்கா தாக்குதல் தொடுக்கிறது. இங்கிலாந்தில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சம் புகுந்த அசாஞ்சேவை 2019 இல் பிரிட்டிஷ் போலீசிடம் தூதரகம் ஒப்படைத்தது. 2019 ஏப்ரல் முதல் லண்டனுக்கு அரு கிலே உள்ள பெல்மார் சிறைச்சாலை யில் அவர் கைதியாக உள்ளார். 80 லட்சம் பவுண்ட் செலவில் கட்டப்பட்ட இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரின் மாளிகையில் இருந்து சில கிலோ மீட்டர் தொலை வில் பெல்மார் சிறை உள்ளது.

இதற்கு முன்பு, லண்டனில் கீழமை நீதிமன்றம் அசாஞ்சேயின் உயிருக்கு அமெரிக்க  சிறையில் பாதுகாப்பில்லை எனக் கூறி நாடுகடத்த உத்தரவிட மறுத்துவிட் டது. அசாஞ்சே மீது எவ்வித பூர்வாங்க குற்றச்சாட்டும் இல்லை எனக் கூறியது .ஆனாலும் அவரை ஜாமீனில் விட மறுத்தது ஒரு சறுக்கலே. அமெரிக்க அரசு செய்த மேல்முறை யீட்டை ஏற்றுக் கொண்டு நாடுகடத்த சம்மதித்தது. ஜூலியன் அசாஞ்சேவை விடுதலை செய் என்று பல நாடுகளில் போராட்டம் நடைபெறுகிறது.