world

img

சத்தீஸ்கரில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக காவிக் கும்பல்கள் அட்டூழியம்

ராய்ப்பூர், ஜன.22- “மிக கொடூரமாக வேட்டையாடப் பட்ட போதிலும் எங்களைப் பார்க்க யாரும் வரவில்லை. நீங்கள்தான் முத லில் வந்தீர்கள். உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை” இது  சத்தீஸ்கர் மாநிலம் காம்கேர் மாவட்டத் தின் பங்குத்தந்தை சைமன் தண்டி   பிருந்தா காரத்திடம் கூறிய வார்த்தைகள். வரலாறு காணாத தாக்குதல்களை எதிர்கொண்டுள்ள சத்தீஸ்கரில் உள்ள கிறிஸ்தவ சமூகத்தினரை சந்திக்கவும் பாதிப்புகளை பார்வையிட்டு உதவி களை பெற்றுத்தரவும் சிபிஎம் அர சியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் வந்திருந்தார். பஸ்தார்  பகுதியில் உள்ள காம்கேர், கொண்டா காவ், நாராயண்பூர் மாவட்டங்களுக்கு சென்ற அவரும் அவரது குழுவினரும் மனசாட்சியை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சித்திரவதைகளை கேட்டறிந்தனர். நாராயண்பூரில் பல தேவாலயங்கள் தகர்க்கப்பட்டிருந்தன. காம்கேர் மற்றும் கொண்டகானிலும் கிறித்த வர்கள் கொடூரமான தாக்குதலுக்கும் அவமதிப்புக்கும் இரையாக்கப்பட்டி ருந்தனர். எந்த நேரத்திலும் நடக்கக்கூடிய தாக்குதல்களுக்கு பயந்து நூற்றுக்கணக்கான மக்கள் காடுகளுக்கும் பிற இடங்களுக்கும் ஓடிவிட்டனர்.

இதற்கெல்லாம் பின்னணியில் சங்பரிவார் அமைப்பான ‘ஜன்ஜாதி சுரக்சா மஞ்ச்’ இருப்பதாக போதகர்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒருமனதாக வெளிப் படுத்தினர். முன்னர் அங்கொன்றும் இங் கொன்றுமாக நடந்த தாக்குதல்கள் கடந்த ஐந்து முதல் ஆறு மாதங் களில் கற்பனை செய்ய முடியாத  அளவை எட்டியுள்ளன. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டின் போது அனை த்து வரம்புகளும் மீறப்பட்டுள்ளன. கிராம ங்களில் உள்ள கிறிஸ்தவர்களுடன் பேசினாலோ, உதவினாலோ 5000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் நிலை ஏற்பட்டது.  இதயத்தை உலுக்கும் தாக்குதல், மிரட்டல் அனுபவங்களை கேட்ட பிறகு, பிருந்தா காரத், காம்கேர் காவல் கண்காணிப்பாளர் பி.ஷலப்குமார் சின்ஹா வுடன் இதுகுறித்து விவாதித் தார். தாக்குதல்கள் மீண்டும் நடை பெறாமல் இருக்க அனைத்து நட வடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக எஸ்பி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தர்மராஜ் மகாபத்ரா, ஆதி வாசி ஏக்தா மகாசபா செயலாளர் பாலாசிங் ஆண்டிலே ஆகியோர் கலந்து கொண்டனர்.