world

img

பாலஸ்தீனர்கள் சிறையில் உண்ணாவிரதம்

இஸ்ரேல் சிறைகள் படுமோசமாக இருக்கின்றன என்று குற்றம் சாட்டி அச்சிறைகளில் அடைக்கப் பட்டுள்ள ஆயிரக்கணக்கான பாலஸ்தீனக் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடு பட்டுள்ளனர். போராட்டத்தை அடக்க பல்வேறு முயற்சி களை இஸ்ரேல் காவல்துறை கையாளுகிறது. அவர்களின் மிரட்டல்களை மீறி கைதிகள் போ ராட்டத்தில் இறங்கியுள்ளனர். நீண்ட நாட்க ளாகவே சிறையின் நிலைமை மோசமாக இருந்து வருவதைச்சுட்டிக்காட்டும் கைதிகள், வேண்டுமென்றே சிறையில் இத்தகைய நிலைமை தொடர்கிறது என்று குற்றம் சாட்டுகின்றனர். போராட்டங்கள் அவ்வப்போது நடந்தாலும், இந்தமுறை ஆயிரக்கணக்கான கைதிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். சிறைக்கு வெளியில் போராடும் கைதிகளுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. மேற்குக் கரையின் பல்வேறு பகுதிகளில் பாலஸ்தீன மக்கள் வீதிகளில் இறங்கிப் போ ராடுகிறார்கள். உண்ணாவிரதம் இருக்கும் கைதிகளுக்கு ஆதரவான முழக்கங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு வீதி களில் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

நீதிக்காகப் போராடும் கைதிகளுக்கு ஆதரவாக நாங்கள் நிற்கிறோம் என்று மக்கள் முழக்கமிடு கின்றனர். ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் என்று கைதிகள் அறிவித்திருக்கிறார்கள். ஆனால் இந்தப்போராட்டத்திற்குப் பிறகும் நிலைமை சரி செய்யப்படாவிட்டால், காலவரை யற்ற போராட்டமாக மாறும் என்று எச்ச ரித்துள்ளனர். ஆனால், தேவையற்ற முறை யில் அறைகளுக்குள் நுழைந்து தேடுதல், உற வினர்கள் வருவதற்கு கட்டுப்பாடுகள் என்று போராடும் கைதிகள் மிரட்டப்படுகிறார்கள். இஸ்ரேலிய சிறைகளில் சுமார் 4,500 பாலஸ்தீனக் கைதிகள் அடைத்து வைக்கப் பட்டுள்ளனர். 2017ஆம் ஆண்டிலும் தற்போது நடைபெற்று வருவது போன்றதொரு உண் ணாவிரதப் போராட்டத்தை வெற்றிகரமாக கைதிகள் நடத்தினர். இந்த முறை சிறைக்கு வெளியிலும் பெரும்அளவில் மக்கள் கைதிக ளுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்து வரு கிறார்கள். இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு உள்ள பகு திகளிலும் இந்தப் போராட்டம் பரவியுள்ளது.