world

வடக்கு மாலி: தோல்வியுடன் முடிகிறது பிரான்ஸ் ஆக்கிரமிப்பு

பாரிஸ், டிச.19- பயங்கரவாதிகளுக்கு எதிரா கப் போராடுகிறோம் என்ற பெயரில் கடந்த 9 ஆண்டுகளாக வடக்கு மாலி யில் இருந்த பிரான்ஸ் படைகள் அங்கிருந்து வெளியேற முடி வெடுத்துள்ளன. லிபியாவில் கடாபிக்கு எதி ரான நடவடிக்கைகளில் அமெரிக் காவுடன் கைகோர்த்து பிரான்சும் களம் இறங்கியது. கடாபிக்கு எதி ராகப் போரிட்டுக் கொண்டிருந்த தீவிரவாதிகளுக்கு சட்டவிரோத மாக விமானங்கள் மூலம் ஆயு தங்களை விண்ணிலிருந்து பிரான்ஸ் வீசியது. 2011 ஆம்ஆண்டு நடந்த இந்த நடவடிக்கைகள் கடாபியை ஆட்சி யிலிருந்து அகற்றியது. இந்த நடவடிக் கைகள் மாலியையும் சீர்குலைத்தது.  ஆயுதங்களைக் கையில் எடுத்த தீவிரவாத அமைப்புகள் தங்களுக்குள் போராடியதோடு பிரான்சுக்கு எதிராகவும் திரும் பின. அவர்களை ஒடுக்குகிறோம் என்ற பெயரில்  மாலியின் வடபகு திக்குள் படைகளை நிறுத்தியது.

வரலாற்று சிறப்புமிக்க டிம்புக்டு என்ற நகரைத் தன் கட்டுப்பாட்டுக் குள் வைத்துக் கொண்டது. 9 ஆண்டுகளில் உள்நாட்டுப் போரி லும் தலையிட்டது. தற்போது எந்த விதத் தீர்வும் கிடைக்காத நிலை யில் அங்கிருந்து தங்கள் படைக ளை விலக்கிக் கொள்வதாக பிரான்ஸ் அறிவித்திருக்கிறது. லிபியாவின் கடாபியை வெளி யேற்றுகிறோம் என்ற பெயரில் தீவிரவாதிகளுக்கு தரப்பட்ட ஆயு தங்களால் மாலியில் ஆயிரக்க ணக்கான மக்கள் கொல்லப்பட்ட னர். பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அகதிகளாக வெளியேறியிருக்கி றார்கள்.

பிரான்சின் ஆக்கிரமிப்பு க்கு எதிரான போராட்டங்கள் அதி கரித்து வந்த நிலையில்தான் வேறு வழியின்றி வெளியேற முடிவெ டுத்திருக்கிறார்கள். மாலியில் பிரான்சின் நடவடிக்கைகளை வைத்து, “பிரான்சின் ஆப்கானிஸ் தான்” என்று வர்ணிக்கிறார்கள்.  சட்டவிரோத நடவடிக்கைகள் மாலிக்குள் தங்கள் படைகளை பிரான்ஸ் அனுப்பியதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் ஒப்புதலைப் பெறவில்லை. மேலும், பிரான்சின் நாடாளுமன்றத்திடம் கூட ஒப்பு தல் எதுவும் பெறப்படவில்லை. இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்பில் டிம்புக்டு நகரிலிருந்து வெளியேறி னாலும், மற்றொரு பகுதியான சகேல் பிரான்சின் கட்டுப்பாட்டுக் குள்தான் உள்ளது. அதிலிருந்து வெளியேறுவது பற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அங்கு 3 ஆயிரம் படைவீரர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள்.