world

img

தீக்கதிர் உலக செய்திகள்

நிக்கி ஆதரவாளர்கள்  வாக்கு யாருக்கு?

குடியரசு கட்சி சார்பிலான அமெ ரிக்க ஜனாதிபதி வேட்பாளர் தேர்வில் இருந்து நிக்கி ஹெய்லி வெளியேறி யுள்ளார். இதனால் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப் தான் போட்டியிடுவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டின் மொத்தமுள்ள 30 லட்சம் வாக்காளர்களில் நிக்கி ஆதரவா ளர்களின் வாக்குகளை யார் பெறுவது என்ற போட்டி ஜோ பைடன், டிரம்புக்கு இடையே  உருவாகியுள்ளது.

கனடாவில் இலங்கையைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட 6 பேர் கொலை 

கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங் கையைச் சேர்ந்த 4 குழந்தைகள் உட்பட 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். கனடா நாட்டில் வசித்து வரும் இலங்கை நாட்டைச் சேர்ந்த தர்ஷினி என்பவரது வீட்டில் கனடா வைச் சேர்ந்த 19 வயது மாணவர் ஒருவர் வசித்து வந்தார். இவர் தர்ஷினி மற்றும் அவரது குடும்ப நண்பர்,  4 குழந்தைகள் உட்பட 6 பேரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். குழந்தையின் தந்தை பலத்த காயத்துடன் மருத்துவமனை யில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாக் ஆளும் கூட்டணி  ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு 

பாகிஸ்தானின் ஆளும் கூட்டணி சார்பாக ஆசிப் சர்தாரி ஜனாதி பதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.   கூட்டணி கட்சிகளின் தலைவர்களை கவுர விக்கும் விருந்தின் போது பாகிஸ்தான் மக்கள் கட்சியின் (பிபிபி) இணைத் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சர்தாரி சனி யன்று (மார்ச் 9) நடக்க உள்ள   பாகிஸ்தான் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். 

இந்தியர்களை போர்க்களத்திற்கு  அனுப்பியதாக சோதனை

ரஷ்யா-உக்ரைன் போர்க் களத்திற்கு இந்திய இளைஞர்களை அனுப்பிய தாக இந்தியா முழுவதும் 10 க்கும் மேற் பட்ட இடங்களில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சோதனை நடத்தியுள்ளது. போர்க் களத்தில் ஆபத்தான வேலைகளுக்கு  இளை ஞர்களை அனுப்பியதற்காக விசா ஆலோசனை நிறுவனங்கள் மற்றும் பயண நிறுவனங்கள் மீது மத்திய புலனாய்வு அமை ப்பு நடத்திய சோதனையில் ஆவணங்கள் மற்றும் 50 லட்சம் ரொக்கத்தை கைப்பற்றியுள்ளது. 

மாசா அமினி மரணத்துக்கு  ஈரான் அரசே பொறுப்பு : ஐ.நா 

2022 செப்டம்பர் மாதம்  மாசா அமினி கொல்லப்பட்டதற்கு ஈரான் அரசே பொறுப்பு என ஐ.நா உண்மை கண்டறி யும் குழு தெரிவித்துள்ளது. ஈரான் அரசு கட்டாய ஹிஜாப் சட்டத்தை அமல்படுத்தியபோது அதற்கு எதிராக நாடு முழுவதும் போராட் கள் வெடித்தன. அப்போராட்டத்தில் அந்நாட்டு காவல்துறையால் கடுமையாக தாக்கப்பட்டு  அமினி கொல்லப்பட்டார். இது உலகம்முழுவ தும் பெரும் கண்டனங்களையும் போராட்டத்தை யும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.