world

img

போராட்ட எதிரொலி அவசர நிலையை அறிவித்தது ஹங்கேரி

புடாபெஸ்ட், ஜூலை 15- விலைவாசி உயர்வைக் கண்டித்து மக்கள் பெரும் எழுச்சிகரமான போராட்டங் களை நடத்தி வருவதால் நாட்டில் அவசர நிலையை நடைமுறைக்குக் கொண்டு வருவதாக ஹங்கேரி நாட்டின் பிரதமர் விக்டர் ஓர்பன் அறி வித்துள்ளார். 2010 ஆம் ஆண்டிலிருந்து பிரதமராக இருந்து வரும் ஓர்பன், முதன்முறையாக மக்க ளிடமிருந்து கடும் எதிர்ப்பைச் சந்தித்து வருகிறார். நாட்டின் பணவீக்கம் 12 விழுக்காட்டை எட்டியுள்ளது. கடந்த 24 ஆண்டு களில் இல்லாத அளவுக்கு என்று இந்தப் பணவீக்கத்தை பொருளாதார வல்லுநர்கள் கூறுகிறார்கள். அமெரிக்க டால ருடன் ஒப்பிடும்போது ஹங்கேரியின் நாணயமான போரிண்ட் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.  இந்நிலையில் எரிபொருட் கள் இறக்குமதியில் நெருக்கடி ஏற்பட்டது. ரஷ்யா-உக்ரைன் விவகாரத்தால் எரிபொருள் நெருக்கடி கட்டுக்குள் வராமல் இருக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் ஏராள மான மக்கள் திரண்ட போராட்ட ங்கள் நடந்துள்ளன. ஆயிரக் கணக்கான மக்கள் தலைநகர் புடாபெஸ்டில் உள்ள இரண்டு பெரிய பாலங்களை மறித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இந்த பொருளாதார நெருக்கடி யிலும் சிறிய நிறுவனங்கள் மற்றும் பல தனி நபர்கள் பாதிக்கப்படும் வகையிலான  புதிய வரிகள் போடப்பட்டி ருக்கின்றன. இதையும் எதிர்த்து  போராட்டங்கள் அறிவிக்கப் பட்டுள்ளன.