world

img

சிலியின் 24 பேர் அமைச்சரவையில் 14 பெண்கள்; பாதுகாப்பு அமைச்சராக அலெண்டேயின் பேத்தி

சாண்டியாகோ (ராய்ட்டர்ஸ்), பிப்.1- சிலியின் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கேப்ரியல் போரிக், தனது அமைச்சரவையில் மேலும் மூன்று கம்யூனிஸ்ட் கட்சி பெண்களை சேர்த்துள்ளார். முன்னாள் சோசலிஸ்ட் ஜனாதிபதியாக சால்வ டார் அலெண்டேயின் பேத்தி மாயா  பெர்னாண்டஸ் அலெண்டே பாது காப்பு அமைச்சராக பதவியேற்க உள்ளார். 1973 இல் அமெரிக்க ஆதரவுடன் இராணுவப் புரட்சியில் தனது தாத்தா கொல்லப்பட்டு ஐம்பது ஆண்டு களுக்குப் பிறகு நாட்டின் ஆட்சி  அதிகாரத்துக்கு மாயா வந்துள்ளார். சிலி கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பின ரான ஜேனட் ஹரா, நலன் மற்றும் தொழி லாளர் அமைச்சராகவும், ஃபிளாவி யோ ஆண்ட்ரெஸ் சலாசர் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சராக வும் பணியாற்றுவார்கள். அரசாங்கத் தின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பா ளராக கமிலா வலேஜோவும் நிய மிக்கப்பட்டுள்ளார். சிலி மக்களின் கண்ணியத்திற்கான போராட்டம் தொட ரும் என சிலி கம்யூனிஸ்ட் கட்சி தெரி வித்துள்ளது. போரிக்கின் அமைச்சர வையில் உள்ள 24 அமைச்சர்களில் 14 பேர் பெண்கள். சிலியின் வரலாற்றில் முதன்முறையாக அமைச்சரவையில் பெண்கள் பெரும்பான்மை இடங்களை பெற்றுள்ளனர்.