world

ட்விட்டரை 44 பில்லியன் டாலருக்கு விலை பேசிவிட்டார் எலான் மாஸ்க்

நியூயார்க், ஏப்.26- ஒரு வழியாக ட்விட்டர் நிறுவனத்தை தனது வலைக்குள் சிக்க வைத்துவிட்டார் எலான் மாஸ்க். ட்விட்டரை கைப்பற்று வதற்கு நீண்டகாலமாக எலான்  மாஸ்க் முயற்சித்துக் கொண்டிருந்தார். ஒரு வழியாய்  திங்களன்று இந்த முயற்சியில் மாஸ்க் வெற்றியடைந்துவிட்டார். ட்விட்டரை கைப்பற்றியுள்ள மாஸ்க் தம்மை  “சுதந்திரமானவன்- யாருடைய பேச்சுக்கும் தடையானவன் அல்ல என்று அவ்வப்போது கூறிக்கொள்வார். அதே நேரத்தில் அவரை யாராவது கேள்வி கேட்டா லோ அல்லது அவர் உடன்படாத கருத்துக் களை பகிர்ந்தாலோ  அவர்களது ட்விட்களை  தடுப்பது, அல்லது இழிவாகப் பேசுவதில் பெயர் பெற்றவர்.  எலான் மாஸ்க் திங்களன்று ட்விட்டரை சுமார் 44 பில்லியன் டாலருக்கு வாங்குவதற் கான ஒப்பந்தத்தை உறுதி செய்தார். ட்விட்டரில் எலான்மாஸ்கை ஊக்குவிப்ப வர்கள், விமர்சிப்பவர்கள் உட்பட 83 மில்லி யனுக்கும் அதிகமானோர் பின் தொடர்பவர் களாக உள்ளனர். ட்விட்டரை கைப்பற்றி யுள்ள மாஸ்க், சமூகம் மற்றும் பொருளா தாரப் பிரச்சனைகளில் கருத்துத் தெரிவிக்கும் போது, அதன் உள்ளடக்கம் பாதுகாக்கப் படும். “சுதந்திரமான பேச்சுதான் ஜனநாயக செயல்பாட்டின் அடித்தளம், ட்விட்டர் மனித குலத்தின் எதிர்காலத்திற்கும், இன்றியமை யாத விஷயங்களை விவாதிக்கும் ஒரு களம் என்பது உறுதிப்படுத்தப்படும் என எலான் மாஸ்க் கூறியுள்ளார்.  உலகின் மிகப் பெரிய செல்வந்தரான  டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி, ட்விட்டரை விற்கவும் தனியார்மயமாக்கவும் விரும்புவதாகக் கூறியிருந்தார், ட்விட்டர்  சுதந்திரமான பேச்சுக்கான தளமாக இல்லை என்று அவர் நினைக்கிறார். மாஸ்க்குடன் ஒப்பந்தம் செய்ய ட்விட்டர் பங்குதாரர்களின் அழுத்தம் தான்  பிரதான காரணம். ட்விட்டரை விற்பதற்கு அதன் இயக்குநர்கள் குழு ஒருமனதாக ஒப்புதல் அளித்ததாக ட்விட்டர் தெரிவித்துள் ளது. 11 உறுப்பினர்களைக் கொண்ட குழுவில் ட்விட்டர் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை நிர்வாக அதி காரி ஜாக் டோர்சியும் ஒருவர். அவர் மே  மாதத்தில் குழுவிலிருந்து விலகத் திட்ட மிட்டுள்ளார்.