world

படையெடுக்கத் திட்டமிட்டார்களா? அர்ஜெண்டினா விசாரிக்கிறது

பியூனஸ் அயர்ஸ், பிப்.19- அமெரிக்க அரசோடு கைகோர் த்துக் கொண்டு வெனிசுலா மீது படை யெடுக்க அர்ஜெண்டினாவின் முன்னாள் ஆட்சியாளர்கள் திட்டமிட்டி ருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் மீது விசாரணை நடைபெறவுள்ளது. வெனிசுலாவில் சாவேஸ் தலை மையிலான இடதுசாரி அரசு அமைந்த தில் இருந்தே, அங்கு தங்களுக்குச் சாதகமான அரசை நிறுவுவதில் அமெரிக்கா ஆர்வம் காட்டி வந்தது. இதற்காக அர்ஜெண்டினாவின் மவுரி சியோ மக்ரி தலைமையிலான வலது சாரி அரசைத் தூண்டி விட்டார்கள். 2015 முதல் 2019 வரையில் அர்ஜெண்டி னாவின் ஜனாதிபதியாக இருந்த மக்ரி, அதற்கு இணங்கியிருக்கிறார். வாஷிங்டனில் தீட்டிய திட்டத்தின்படி போர் தொடுக்க அர்ஜெண்டினாவின் ராணுவத்தை மக்ரி தயார் செய்தி ருக்கிறார். இதற்கு “ஆபரேசன் பூமா” என்று பெயர் சூட்டியிருந்தார்கள். லத்தீன் அமெரிக்காவில் இருந்த அனைத்து வலதுசாரி அரசுகளையும் ஒருங்கி ணைத்து இந்தப் பணியைச் செய்ய அமெரிக்கா திட்டமிட்டிருந்தது.

இதில் நேரடி நடவடிக்கை எடுக்க அர்ஜெண்டி னாவைத் தேர்வு செய்தனர். வெனி சுலாவின் மீது அர்ஜெண்டினா ராணு வம் படையெடுப்பது என்பது இந்தத் திட்டமாகும். ஜனாதிபதி மக்ரி இதற்கு  ஒப்புதல் அளித்திருந்தார். இந்த சதித்திட்டங்கள் குறித்து விசாரணை நடத்தப்போவதாக தற்போது ஆட்சியில் உள்ள இடதுசாரி அரசு அறிவித்திருக்கிறது. இந்த விவ காரம் குறித்து அர்ஜெண்டினா மற்றும்  வெனிசுலா ஆகிய நாடுகளின் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் தொலைபேசியில் பேசியிருக்கி றார்கள். வெனிசுலா மற்றும் அதன் ஜனாதிபதி மதுரோவுக்கு எதிரான அமெரிக்க சதியில் அர்ஜெண்டினா எந்த அளவுக்கு பங்கேற்றது என்பதை விசாரிப்போம் என்று அர்ஜெண்டினா பாதுகாப்புத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். அமெரிக்க ராணுவத்தின் தெற்கு தலைமையத்திற்குச் சொந்தமான ஒரு ஆவணம் கிடைத்திருக்கிறது. இந்த ஆவணத்தின்படி, வெனிசுலா மீது படையெடுக்க அர்ஜெண்டினா ராணுவத்திற்கு பயிற்சி அளித்திருக்கி றார்கள். அர்ஜெண்டினாவிற்கு ஒரு ஆபத்தாக வெனிசுலா உருவாகி யுள்ளது என்று அமெரிக்கா பிரச்சாரம் செய்திருக்கிறது.