world

img

இமாச்சல பிரதேசம்: பிப்.19 முதல் பள்ளிகளை திறக்க முடிவு  

இமாச்சல பிரதேசத்தில் பிப்.19 முதல் அனைத்து கல்வி நிறுவனங்களையும் திறக்க இமாச்சல பிரதேச அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இந்தியாவில் கடந்த இரண்டு மாத காலங்களாக அதிகரித்து கொரோனா தொற்றால், தொற்றை கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை பல்வேறு மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டன.  இந்த சூழலில் கொரோனா தொற்று குறைந்ததால் பல மாநிலங்களில் மூடப்பட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் பல்வேறு செயல்பாடுகளை படிபடிப்படையாக மீண்டும் திறக்க தொடங்கி உள்ளன.  அந்த வகையில் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதனைதொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில், வரும் 17 ஆம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்களை திறக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் திரையரங்குகள். உடற்பயிற்சிகளையும் பிப்.17 ஆம் தேதி திறக்க இமாச்சலப்பிரதேச அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   

;