world

img

கூட்டு உழைப்பு மூலம் முறியடிக்கத் திட்டமிடும் கியூபா

ஹவானா, ஆக. 23 - அமெரிக்காவின் பொருளாதார தடைகளால் ஏற்பட்டுள்ள பாதிப்பு களை சரிசெய்ய, விவசாய உற்பத்திப் புரட்சிக்கு கியூப அரசு திட்ட மிட்டுள்ளது.  “நாட்டின் விவசாய உற்பத்தியை மாற்றியமைத்து வலுப்படுத்துவது மற்றும் “விவசாயத் துறையில் உற்பத்திப் புரட்சியை முன்னெடுக்கும் ஓர் அரசியல் மற்றும் கூட்டு இயக்கத்தை” தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக கியூப அரசு தெரிவித்துள்ளது. உணவு உற்பத்தி, மின்சார உற்பத்தி, அதிகரித்து வரும் பணவீக்கம்,  விலையுயர்வு போன்ற அத்தியாவசிய பிரச்சனைகள் குறித்து தீவிரமான விவாதம் நடத்தப்பட்ட பின் - குறிப்பாக உணவு உற்பத்தியை அதிகரித்து நாட்டின் செல்வத்தை உருவாக்க வேண்டும் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ள தாக கியூப ஜனாதிபதி மிகுயேல் தியாஸ் - கேனல் கூறியுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஒவ்வொரு கியூப  மக்களும் முட்டை, மாமிசம், பால் உள்ளிட்ட விலங்கு உணவுப் பொருட்களில் இருந்து எடுக்கப்படும் புரதங்களில் 438 கிராம் மட்டுமே எடுத்துள்ளனர்; இது 2023 மே  மாதத்தில் 347 கிராமாக மட்டுமே இருக் கிறது. ஆனால் சராசரியாக ஒரு மதத்திற்கு இவர்கள் 5 கிலோ புர தத்தை உட்கொண்டு இருக்க வேண்டும். இதற்கு காரணம் இறைச்சிக் காக தொழில்முறையில் கோழிகள் மற்றும் பிற விலங்குகள் வளர்ப்பதில் பிரச்சனைகள் இருந்துள்ளது என்பது தான்.  அதாவது அமெரிக்கா ஏற்படுத்திய பொருளாதார முடக்கத்தால் கால்நடைத் தீவனத்திற்கான மக்காச் சோளம், சோயா,சோளம் மற்றும் பிற பயிர்களின் விளைச்சலுக்குத் தேவையான உரங்களை இறக்குமதி செய்ய முடியவில்லை; இதனால் இவற்றின் விளைச்சல் குறைந்து  கால்நடைகளுக்கு போதுமான தீவ னத்தை உறுதிப்படுத்த இயலாமல் போயுள்ளது; இதன் காரணமாக அதிக புரதச்சத்து வழங்கும் பன்றி இறைச்சி, பால் பொருட்கள் உள்ளிட்டவற்றின் உற்பத்தி குறைந்துள்ளது.

2023ஆம் ஆண்டில் இதுவரை எதிர்பார்க்கப்பட்ட டீசல் எரிபொரு ளில் 68% மட்டுமே இறக்குமதி செய்யப் பட்டுள்ளது; இது கடந்த ஆண்டை விட  14,700 டன் குறைவு. 28,900 டன் உரங்கள் இறக்குமதிக்கு திட்டமிட்ட நிலையில் வெறும் 168 டன்கள்தான் இறக்குமதி செய்ய வாய்ப்பு கிடைத்துள்ளது.  மேலும் அமெரிக்காவின் பொருளா தாரத் தடைகளால் ஏற்பட்டுள்ள மூலப்பொருட்கள் தட்டுப்பாட்டால் கடந்த ஆண்டு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட 9,600 டன் உரங்களைக் கூட இந்த ஆண்டு உற்பத்தி செய்ய முடியவில்லை. கியூபாவின் இந்த உணவுப் பற்றாக்குறையை திட்டமிட்ட அமெரிக்கத் தலையீடே உருவாக்கி யுள்ளது. 1960 இல் அமெரிக்க வெளி யுறவுத்துறை அமைச்சர் லெஸ்டர் மல்லோரி,  இடதுசாரிகள் ஆளும் நாடு களை  கவிழ்க்க பொருளாதார முற்று கைத் திட்டத்தை முன்மொழிந்தார்.அதாவது  பொருளாதார தடைகள் மூலம் இடதுசாரிகள் ஆளும் நாடு களில் பஞ்சத்தை உருவாக்கி அரசின் மீது மக்களுக்கு விரக்தியை ஏற்படுத்தி அந்நாட்டு வலதுசாரிகள் மூலம் ஆட்சி யை கவிழ்த்து பிறகு அந்நாட்டை அமெரிக்கா தன் ஆசைக்கு ஏற்ப சுரண்டும். கியூபா மட்டுமின்றி பல நாடு கள் இந்த தடைகளால்  முடக்கப் பட்டுள்ளன.  அமெரிக்காவின் இந்த பொருளா தார முடக்கத்தினை கியூப மக்களுடன் இணைந்த  கூட்டு உழைப்பின் மூலம் எதிர்கொள்ள அந்நாட்டின் அரசு தீவிர முனைப்பில் ஈடுபட்டுள்ளது.