காத்மாண்டு, மார்ச் 5- நேபாளத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத் துள்ளன. பிரதமர் புஷ்ப குமார் தமால் தலை மையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்), நேபாள கம்யூ னிஸ்ட் கட்சி (ஒருங்கிணைந்த மார்க்சிய லெனி னிஸ்ட்), ராஷ்டிரிய ஸ்வதந்திரா கட்சி, ஜனதா சமாஜ்வாதி கட்சி ஆகியவை இணைந்து புதிய கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது. நேபாளத்தில் கடந்த 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலை யடுத்து, புஷ்ப குமார் தமால் தலைமையி லான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோ யிஸ்ட் மையம்) மற்றும் ஷேர் பகதூர் துபே தலைமையிலான நேபாள காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. நாடாளுமன்ற அவைத் தலைவர் பத வியை நேபாள காங்கிரஸ் கட்சிக்கு வழங்குவ தாக கம்யூனிஸ்ட் கட்சி தெரிவித்திருந்த நிலையில் மறுப்பதாக நேபாள காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது. இந்த முரண்பாட்டின் காரணமாக ஆளும் கூட்டணியில் தற்போ தைய மாற்றம் உருவானதாக கூறப்படு கிறது. இது குறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய பிரதமர் புஷ்ப குமார் தமால், எங்கள் கட்சியின் மத்தியக் குழு முடிவின்படி நாடாளுமன்ற அவைத் தலைவர் பதவிக்கு எங்கள் கட்சி வேட்பாளர் கிருஷ்ணா சிது வாலா போட்டியிடுவார். நேபாள காங்கிரஸ் கட்சிக்கு நாங்கள் உத்தரவாதம் எதையும் வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.