பாலி, ஜூலை 9- இந்தோனேசியாவின் பாலித் தீவில் நடைபெற்று வரும் ஜி-20 நாடுகளின் உச்சிமாநாட்டில் உலக அளவிலான உணவுப் பாது காப்புக்கு என்ன செய்ய வேண்டும் என்று சீனா வலியுறுத்தியுள்ளது. ஜி-20 மாநாட்டில் பேசிய சீனாவின் வெளியுறவுத்துறை அதி காரிகளில் ஒருவரான வாங் யி, “உணவு மற்றும் எரிபொருள் ஆகிய இரண்டும் உலகப் பொருளாதாரம் ஆரோக்கியமாக இருப்பதற்கு முக்கியமானவையாகும். வளர்ச்சியைத் தக்க வைத்துக் கொள்ளும் இலக்குகளை அடைவதற்கும் இந்த இரண்டும் அத்தி யாவசியத் தேவையானவை” என்று குறிப்பிட்டார். பாலியில் ஜி-20 நாடுகளின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் கலந்து கொள்ளும் உச்சிமாநாடு நடைபெற்று வருகிறது. எட்டு முன்மொழிவுகளை அவர் கூட்டத்தில் வைத்தார். ஒன்று, ஐக்கிய நாடுகள் சபை பலவீனப்படாமல், பலப் படுத்தப்பட வேண்டும். உணவு மற்றும் விவசாயக்கழகம், விவசாய வளர்ச்சிக்கான சர்வதேச நிதியம் மற்றும் ஐ.நா. உலக உணவுத் திட்டம் ஆகிய அமைப்புகளின் பணிகளுக்கு ஆதரவு தர வேண்டும். இரண்டாவது, மனிதாபிமான உதவிகளுக்காக உலக உணவுத்திட்டம் வாங்கும் உணவுப் பொருட்கள் மீது ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடாது.
மூன்றாவதாக, சர்வதேச சந்தைக்குள் ரஷ்யா, உக்ரைன் மற்றும் பெலாரஸ் ஆகிய நாடுகளின் விவசாயப் பொருட்கள் வருவதற்குத் தடை இருக்கக்கூடாது. நான்காவது, சந்தைக்குள் உணவுப் பொருட்கள் வருவதில் உள்ள கட்டுப்பாடுகளை நீக்கி எளிமையாக்க வேண்டும். வர்த்தகம் மற்றும் தொழில்நுட்பத் தடைகள் இருக்கக்கூடாது. ஐந்தாவது, உணவுப் பொருட்களை வர்த்தகம் செய்ய நாடு கள் எடுக்கும் அவசரகால நடவடிக்கைகள் குறுகிய காலத்திற்கா கவும், வெளிப்படையாகவும், இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும். உலக வர்த்தகக் கழகத்தின் விதிகளுக்கு உட்பட்டதாகவும் இருப்பது அவசியமாகும். ஆறாவது, சர்வதேச விவசாய ஆய்வு ஆலோசனைக் குழுவிற்கு ஆதரவளிக்க வேண்டும். தொழில்நுட்ப பரிமாற்றங்க ளுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளைக் குறைக்க வேண்டும். நாடுகளுக்கிடையில் புதிய கண்டு பிடிப்புகள் மற்றும் விவசாய அறிவிய லில் ஒத்துழைப்பு அதிகரிக்க வேண்டும். ஏழாவதாக, உணவு இழப்பு மற்றும் வீணடிப்பதைக் குறைக்க வேண்டும். இது குறித்த சர்வதேச மாநாடு ஒன்றை சீனா நடத்தியது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளை அனை த்து நாடுகளின் ஒத்துழைப்புடன் நடைமுறைப்படுத்த சீனா தயாராக உள்ளது. எட்டாவது, உணவுப் பொருட்கள் உற்பத்தி, சேமிப்பு மற்றும் மூலதனம், தொழில்நுட்பம் மற்றும் சந்தையால் ஏற்படும் இழப்பைக் குறைத்தல் ஆகிய நடவடிக்கைகளில் வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டும். மேற்சொன்ன முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்த ஐ.நா.வின் உலக உணவுத்திட்ட அமைப்புக்கு உணவுப் பொருட் களை சேமிக்க உதவும் கிடங்கு ஒன்றை அமைத்துத்தர சீனா தயாராக இருக்கிறது என்றும் வாங் யி குறிப்பிட்டார்.