ஜோகன்னஸ்பர்க், ஆக. 22 - பிரிக்ஸ் கூட்டமைப்பின் 15 ஆவது உச்சி மாநாடு தென்னாப்பிரிக்க தலை நகரான ஜோகன்னஸ்பர்க் கில் துவங்கியது. இம்மாநா ட்டில் பங்கேற்க இந்திய பிர தமர் நரேந்திர மோடி , சீன ஜனாதிபதி ஜி ஜின் பிங் மற்றும் பிரேசில் ஜனாதிபதி லூலா ஆகியோர் வருகை புரிந்துள்ளனர். ரஷ்ய ஜனாதிபதி விளாடி மிர் புடின், இணைய வழியில் இம்மாநாட்டில் பங்கேற்க இருக்கிறார். ரஷ்ய நாட்டின் உயர்மட்ட தூதர்கள் இந்த மாநாட்டில் நேரடியாக பங்கேற்றுள்ளனர். 2019 ஆம் ஆண்டிற்கு பிறகு நேரடியாக நடை பெறும் இந்த உச்சிமாநாட் டில் டாலருக்கு மாற்றாக புதிய நாணயத்தை அறி முகப்படுத்துவது, கூட்ட மைப்பில் புதிய நாடு களை இணைப்பது, வளர்ந்து வரும் நாடுகளையும் இணைத்து பொருளாதார வளர்ச்சியை மேற்கொள் வது குறித்தான மிக முக்கிய விவாதங்கள் நடை பெறுகின்றன. இந்த மாநாடு ஆகஸ்ட் 24 அன்று முடி வடைய இருக்கிறது.