வாஷிங்டன், டிச.28- போர் விமானங்களோடு சேர்ந்து அதில் பொருத்தப்பட்டிருந்த குண்டுகளும் காணாமல் போய்விடுவது உலகுக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள தாக சர்வதேச வல்லுநர்கள் கவலை தெரிவித்துள்ளனர். சில ஆண்டுகளுக்கு முன்பாக, கனடா வைச் சேர்ந்த கடல் நீர் விளையாட்டு வீரர் ஒருவர் பயிற்சிக்காக கடலில் ஒரு நாள் குதித்தார். ஆழத்தைச் சென்றடைந்த அவர், ஏதோ குண்டு மாதிரி தெரிகிறதே என்று அருகில் சென்று பார்த்தார். அது குண்டுதான் என்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். 1950 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் பி-36 என்ற போர் விமானம் பறந்து கொண்டிருந்தபோது திடீ ரென்று தீப்பிடித்தது. அப்போது விமா னத்தில் அணுகுண்டு இருந்தது. தீப்பிடித்த தால் அந்த குண்டை பசிபிக் பெருங்கடலில் வீசி எறிந்தார்கள். அது வெடிக்காமல் கடலுக்கடியில் தங்கிவிட்டது. இதைத்தான் அந்த விளையாட்டு வீரர் கண்டுபிடித்தார். இந்தச் செய்தி நம்மை திடுக்கிட வைக்கலாம்.
ஆனால், இந்த ஒரு குண்டு மட்டுமல்ல. இதுபோன்று ஏராளமான குண்டுகள் கடந்த பல ஆண்டுக ளில் இந்த உலகம் இழந்திருக்கிறது. அரசு களின் புள்ளிவிபரங்களின்படியே, கிட்டத்தட்ட 50 அணுகுண்டுகள் காணாமல் போயிருக்கின்றன. சில மாதங்கள் தேடி விட்டு அப்படியே விட்டுவிட்டார்கள். தங்கள் அணுகுண்டுகள் காணாமல் போய்விட்டன என்று அதிகாரப்பூர்வமாக அமெரிக்க ராணுவ கூட்டணியான நேட்டோ வில் உள்ள நாடுகள் அலாஸ்கா, ஜப்பான், கிரீன்லாந்து மற்றும் மத்திய தரைக்கடல் பகுதிகளில் அவற்றை இழந்துள்ளன. உலகின் பல கடற்பகுதிகளில் அணுஉலை கள் பொருத்தப்பட்ட நீர்மூழ்கிக்கப்பல்கள் காணாமல் போயுள்ளன. மிகவும் மோச மான சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சனைகள் இந்த உலகம் எப்போது வேண்டுமானா லும் எதிர்கொள்ள வேண்டி வரலாம் என்று சர்வதேச வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். மிகவும் அதிகமான அணுகுண்டு களை இழந்த நாடு அமெரிக்காதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட காலம் தேடுவதோடு நின்றுவிடும் அமெ ரிக்கா, வருங்காலத்தில் ஏற்படப்போகும் அழிவை நினைத்து கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. பனிப்போர் காலத்தில் எப்படிப் போர் விமானங்கள் குண்டுகளைத் தாங்கி வலம் வந்து கொண்டிருந்தனவோ, அது போன்று தற்போதும் நிகழ்கிறது. மீண்டும் போர் விமானங்களோடு, குண்டு களும் காணாமல் போகலாம். இது குறித்த பல்வேறு ஆய்வுகளும் கவலையளிப்ப தாகவே உள்ளன.