world

img

“தனது பகுதிகள்” மீதே குண்டு வீசும் உக்ரைன்

குடியுரிமை 

ரஷ்ய குடிமக்களாக மாற விரும்பும் உக்ரைனைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்கத் தயார்  என்று ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள் ளார். இதற்கு முன்பாக கிழக்கில் உள்ள இரண்டு பகுதிகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு இருந்தது. தற்போது உக்ரைனில் உள்ள யார் வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம். ரஷ்யாவில் வசித்திருக்க வேண்டிய அவசியமோ அல்லது ரஷ்ய மொழித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியதோ இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 

கீவ், ஜூலை 12- உக்ரைனின் தெற்குப் பகுதியில் உள்ள நோவாயா ககோவ்கா நகரின் மீது ராக்கெட்டுகளையும், குண்டுகளை யும் செலுத்தி உக்ரைன் ராணுவம் தாக்குதல்  நடத்தி வருகிறது. உக்ரைனின் கட்டுப்பாட்டுக்குள் இருந்து வரும் நோவாயா ககோவ்கா நகரம் 45 ஆயிரம் மக்கள் தொகை யைக் கொண்டதாகும். இருப்பினும், வரலாற்றுச் சிறப்பு மிக்க பகுதியாகக் கருதப்படுகிறது. சோவியத் யூனியன் காலத்தில் நினைவுச்சின்னங்கள் எழுப்பும் பெரும் திட்டங்கள் இங்கு நிறைவேற்றப்பட்டன. இந்தப் பகுதிக்கு  ரஷ்யா உரிமை கொண்டாடி வருகிறது. தற்போது நடந்து வரும் மோதலுக்கான காரணங்களில் இப்பகுதிக்கான உரிமையும் ஒன்றாகும். இப்பகுதி மக்களில் பெரும்பாலானோர் ரஷ்ய ஆதரவாளர்களாக உள்ளனர். இப்பகுதி மீது திங்கள்கிழமையன்று உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியிருக்கிறது. தனது பகுதி என்று உரிமை கொண்டாடும் உக்ரைன், தனது மக்கள் மீதே ராக்கெட்டுகளை வீசியிருக்கிறது. அமெரிக்காவிட மிருந்து பெறப்பட்டுள்ள ஹிமார்ஸ் என்றழைக்கப்படும் கட்டமைப்பைப் பயன்படுத்தி ராக்கெட்டுகள் வீசப்பட்டன.  தற்காப்புக்காகவே தாங்கள் வழங்கும் ஆயுதங்கள் உக்ரைனில் பயன்படுத்தப்படுகின்றன என்று அமெரிக்கா சொல்லி வருவதும் அப்பட்டமான பொய் என்பதும் இதில் அம்பலமாயிருக்கிறது.

ரஷ்யப்படைகளை எதிர்கொள்ள முடியாமல் திணறிவரும் உக்ரைன் ராணுவம், சர்ச்சைக்குரிய பகுதி களில் மட்டுமல்லாமல் தங்கள் நாட்டில் உள்ள பிற பகுதி களின் மீதும் தாக்குதல் நடத்துகிறது. அந்தத் தாக்குதல் களை ரஷ்யா மீது குற்றம் சாட்டுவதற்குப் பயன்படுத்திக் கொள்கிறது. குடியிருப்புப் பகுதிகள் மீது தாக்குதல் நடத்தி, மேற்கத்திய ஊடகங்கள் மூலமாக அது ரஷ்யா  நடத்திய தாக்குதல் என்று செய்திகளைப் பரப்புகிறது. தங்கள் படைகள் செல்லாத இடங்களில் கூட, இருப்ப தாகப் பொய்களைப் பரப்புகிறார்கள் என்று ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. திங்களன்று நடந்த தாக்குதலில் ஏராளமானோர் காயமடைந்தனர். கட்டிடங்கள் சேதமடைந்தன. காய மடைந்தவர்கள் உள்ளூரில் உள்ள ராணுவ மற்றும்  பிற மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பட்டுள்ளனர் என்று கூட்டு நிர்வாகத் தலைவரான இகாதரினா குபரேவா தெரிவித்துள்ளார். தனது டெலிகிராம் கணக்கு வழியாக அவர் அனுப்பிய செய்தியில், “இப்போது தான் எனக்குச் செய்தி கிடைத்தது. எங்களின் அழகான மற்றும் அமைதியான நோவாயா ககோவ்கா நகர் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அந்தத் தாக்குதலில் அமெரிக்காவின் ஹிமார்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.