தீவிர இனவாத வலதுசாரிக்கு போர்க்கால அமைச்சரவையில் இடம்
இஸ்ரேல் போர்க்கால அமைச்சரவையில் தீவிர இனவாத அமைச்சரான பென் கிவீர் ரகசியமாக இணைக்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் அந்நாட்டு போர்க்கால அமைச்சர வையில் இருந்து முன்னாள் அமைச்சர் ஒருவர் விலகிய நிலையில் தங்களை அமைச்சரவை யில் இணைக்க வேண்டும் என பென் கிவீர் கோரி வந்தார். இதையடுத்து அவர் ரகசியமாக இணைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி யுள்ளன. இவர் இடைக்கால போர் நிறுத்தத்தை தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
போர் வெறியை வெளிப்படுத்தும் நேட்டோ மாநாடு
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டின் முதல் நாள் போர் வெறியை மட்டுமே வெளிப் படுத்தியுள்ளதாக அமெரிக்காவிற்கான ரஷ்ய தூதர் அனடோலி அன்டோனோவ் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் தரப்பில் இருந்து முன்வைக்கப்பட்ட அமைதி ஒப்பந்தம் குறித்து அவர்கள் விவாதிக்கவில்லை. ராணுவ விரிவாக்கத்தில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள் எனவும் அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சாம்சங் தொழிலாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம்
தென் கொரியாவில் உள்ள சாம்சங் நிறுவ னத்தில் 5000 க்கும் அதிகமான தொழி லாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் தொழிற் சங்கம் காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளது.பண வீக்கத்தை எதிர்கொண்டு வாழ்க்கை நடத்த தேவையான ஊதியம்,போனஸ், விடுமுறை உள்ளிட்ட கோரிக்கைகளை நிறை வேற்றவோ தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ சாம்சங் நிறுவனம் முன் வராததால் இந்த வேலை நிறுத்தத்தை அறிவித்துள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை ரயில்வே அதிகாரிகள் தொழிற்சங்கம் வேலைநிறுத்தம்
இலங்கை ரயில்வே அதிகாரிகள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றும் நிர்வாகப் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கையை முன்வைத்து ரயில்வே நிலைய அதிகாரிகள் (ஸ்டேஷன் மாஸ்டர்கள்) சங்கம் வேலை நிறுத்தத்தை துவங்கியது.வேலைநிறுத்தம் காரணமாக நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டன.
வெப்ப அலைக்கு கலிபோர்னியாவில் 460 பேர் பலி
அதிக மக்கள்தொகை கொண்ட அமெரிக்க மாநிலமான கலிபோர்னியாவில் கடந்த பத்தாண்டுகளில் 460 பேர் வெப்ப அலையால் பலியாகியுள்ளனர் என தெரிய வந்துள்ளது. இத னால் 770 கோடி டாலர்கள் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா இன்சூரன்ஸ் துறை 2013 மற்றும் 2022 க்கும் இடையில் ஏழு குறிப்பிடத்தக்க தீவிர வெப்ப நிகழ்வுகளை ஆய்வு செய்ததில் இது தெரிய வைத்துள்ளது. 2022 ஆம் ஆண்டு மட்டும் 200 பேர் வெப்ப அலையால் பலியாகியுள்ளனர்.