காசா இடிபாடுகளை அகற்ற 15 ஆண்டுகள்
காசாவில் 4 கோடி டன் கட்டடஇடிபாடுகளை அகற்ற கிட்டத்தட்ட 15 ஆண்டுகள் ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிவாரணம் மற்றும் பணி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் இடிபாடுகளை அகற்ற 100 க்கும் மேற்பட்ட டிரக்குகளுடன் 50 கோடி டாலர்கள் செலவு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவத்தால் காசாவில் 1 லட்சத்து 28 ஆயிரம் வீடுகள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் மின்சாரக் கட்டணம் குறைப்பு
இலங்கையில் மின்சாரக் கட்டணம் குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள் ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தித் துறை அமைச்சர் காஞ்சனா விஜேசேகர அறிவிப்பின் படி சராசரியாக 22.49 சதவீத மின்சார கட்டணம் குறைக்கப்படும் எனவும், ஜூலை 16 முதல் இது அமலாகிறது எனவும் தெரிய வந்துள்ளது. ஒவ் வொரு காலாண்டுக்கு ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை மாற்றியமைக்கும் அரசின் கொள்கை முடிவின்படி திருத்தம் மேற்கொள் ளப்படுகிறது என கூறப்பட்டுள்ளது.
ஆப்கனில் கனமழை 35 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் 35 பேர் பலியாகியுள்ளார். மேலும் 230 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. பலத்த காற்று, இடியுடன் கூடிய மழையால் ஜலாலாபாத் மற்றும் நங்கர்ஹர் மாகாணங்கள் அதிக பாதிப்புகளை சந்தித்துள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. இதன் காரணமாக உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் அரசு தரப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.
மூன்று கப்பல்கள் மீது ஹவுதி தாக்குதல்
ஏமனின் செங்கடல் மற்றும் மத்தியத்தரைக் கடல் பகுதியில் மூன்று கப்பல்கள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியதாக ஹவுதி குழு தெரிவித்துள்ளது. ஆளில்லா விமா னங்கள், படகுகளைப் பயன்படுத்தி இந்த நடவ டிக்கைகளை மேற்கொண்டதாகக் குறிப் பிட்டுள்ளது. இஸ்ரேல் ராணுவம் காசாவில் தாக்குதல்களை அதிகரித்து வரும் சூழலில் ஹவுதி அமைப்பும் இஸ்ரேல் மற்றும் அதன் ஆதரவு நாடுகள் கப்பல்களின் மீதான தங்கள் தாக்குதலை அதிகரித்துள்ளது.
இம்ரான் கான் கட்சிக்கு தடை
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் தெஹ்ரிக்-இ-இன்சாஃப் (பிடிஐ) கட்சியை தடை செய்ய திட்ட மிட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு தெரிவித் துள்ளது. அந்நாட்டுத் தகவல் தொடர்புத் துறை அமைச்சர் அதாவுல்லா இதனை அறி வித்துள்ளார். பல்வேறு வழக்குகளில் இம்ரான் கான் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். பாக் அரசியலில் இருந்து இம்ரான்கானை அகற்ற வேண்டும் என தற்போதைய ஆளும் கூட்டணி அரசு செயல்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.